Friday, July 1, 2011
கண்ணீர் அஞ்சலி!
மூத்தவழக்கறிஞர் சங்கர சுப்புவின் குமாரர் சதீஷ்குமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக அரசின் அடக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்காய் வழக்காடி வருபவர் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு. கலாநிதி மாறனின் தயாரிப்பில் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளி வந்த “எந்திரன்” படத்தின் மூலக்கதை சம்பந்தமாக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்காக இலவசமாய் வாதாடி, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரோடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சதீஸ்குமார் கொலையைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பையும் தொடர் போராட்டங்களையும் அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரைக் கிளை வழக்கறிஞர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் குரல் கொடுத்துள்ளனர். குற்றவாளிகள் எந்தக் கொம்பனாக இருந்தாலும் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் தண்டனை பெற்றே ஆக வேண்டும்
வழக்கறிஞர் சதீஸ்குமாருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment