Tuesday, December 27, 2011

மயக்கம் என்ன? - தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்ட திரைக்கதை?


அடுத்தவர் மூளை உழைப்பை திருடுவது எத்தனை மட்டரகமானது என்பதே கதையின் கரு. “தன் உழைப்பை ஒருவன் திருடினான் என்பதற்காக மாடியிலிருந்து தலைகுப்புற கீழே விழுவது? மனைவியின் கருவை கலைக்க காரணமான கோபம்… அனைத்தும் ஒரு முழுமையான பைத்தியக்காரன் என்று சான்றிதழ் தரலாம்..”

மனித மூளை தொடர்ந்து புதிய சிருஷ்டிகளை சிருஷ்டிக்க முடியும் என்பதை மறுத்து திரைக்கதை கட்டப்பட்டு இறுதியில் முடிச்சு அவிழ்ந்தாலும் திரைக்கதையில் கோணல் தெரிகிறது.

2004 அக்டோபர் “நவீன ஊடகம்” இலக்கிய இதழில் வெளிவந்த கவிதையே இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படமாக வெளி வந்தது என்கிற சிவில் வழக்கு சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஓ.எஸ்.எண்:11382/2010 ஆக தற்சமயம் நிலுவையில் உள்ளது. இப்பட நாயகனும் அவ்வாறு முயலாமல் பைத்தியமாக மாறுவதனால் மேலும் மூளை திருட்டு அதிகரிக்கவே செய்யும். காவல்துறை நீதித்துறை போன்றவை தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்டதாகவே தமிழ் திரைக்கதைகள் கட்டுப்படுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

No comments:

Post a Comment