Sunday, December 8, 2013

சிம்மக்கல் சீனிவாசன் - தாங்களும் பங்கெடுக்கலாம்...!


தொழில் போட்டியில் பணத்துக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினருக்கும், இதைத் தடுக்கப் போராடும் காவல்துறையின் சிறப்புப் படையினருக்கும் நடுவில் உயிரைக் காக்கப் போராடு இளம் தொழிலதிபர்.

மதுரை மண்ணின் கலாச்சாரம் மற்றும் தொன்மையான விவரங்கள் போன்றவற்றைச் சுவையான காட்சிகளாகச் சேர்த்து அரிதான தமிழ் திரைப்படப் பழைய காட்சிகளின் சேர்க்கைகளுடன் புதிய வடிவில் தயாராக இருக்கிறது.

“சிம்மக்கல் சீனிவாசன்”

இந்தப் படத்தயாரிப்பில் தாங்களும் பங்கெடுக்கலாம்...

குறைந்த பட்ஜெட்டில் மதுரை மாநகரை மையமாக வைத்து இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்கும் இம்முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.

30க்கும் அதிகமான நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர்’ 2013ல் தொடங்கவுள்ளது.

இதில் பங்கெடுக்கும் நண்பர்களின் சிறு முதலீட்டுக்குத் திரைப்படத்தின் வணிக வெற்றியில் அவர்களது முதலீட்டு விகிதத்திற்கேற்றவாறு இலாபத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

திரைப்பட ஆக்கம் வெற்றி பெறாவிடில் இணையத்தில் வெளியிடப்பட்டு அதில் கிடைக்கும் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

குறும்பட வடிவமைப்பில் எடுக்கப்பட்டு திரைப்படமாக திரைப்பட வெளியீட்டாளர்களின் உதவியுடன் வெளியிடப்படவுள்ளது. திரைப்பட வெளியீட்டாளர்களின் உதவி கிடைக்காவிடில் நேரடியாகத் திரையரங்குகளைத் தேடி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய முயற்சிக்கு தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

விலாங்கு மீன்கள் மட்டும் வாழும் திரை நீரோட்டத்தில்
நெத்திலி மீன்களும் நீந்த வேண்டும் எனும் கண்ணோட்டத்தில்

சிம்மக்கல் சீனிவாசன் 

இப்படத்திற்கான எழுத்து, பாடல், இயக்கம்: 

எஸ். இளங்கோவன், வழக்கறிஞர்.

இயக்க மேற்பார்வை:

திரு. வல்லவன்.

இசை:

திரு. மௌனர்.

ஒளிப்பதிவு: 

திரு. தனபால்.

எங்களின் முதல் குறும்படமான “கடவுள் வாழ்ந்த உலகம்” கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

யூ டியூப்பில் பார்ப்பதற்கான இணைய முகவரி:


அனைத்துத் தொடர்புகளுக்கும்:

எஸ். இளங்கோவன்
வழக்கறிஞர்,
6, இராஜேந்திரா 3 வது தெரு,
கரிமேடு,
மதுரை - 625 016.

கைபேசி:

 9443026036.

மின்னஞ்சல்: 

selangovanadvocate@gmail.com