Tuesday, December 27, 2011

மயக்கம் என்ன? - தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்ட திரைக்கதை?


அடுத்தவர் மூளை உழைப்பை திருடுவது எத்தனை மட்டரகமானது என்பதே கதையின் கரு. “தன் உழைப்பை ஒருவன் திருடினான் என்பதற்காக மாடியிலிருந்து தலைகுப்புற கீழே விழுவது? மனைவியின் கருவை கலைக்க காரணமான கோபம்… அனைத்தும் ஒரு முழுமையான பைத்தியக்காரன் என்று சான்றிதழ் தரலாம்..”

மனித மூளை தொடர்ந்து புதிய சிருஷ்டிகளை சிருஷ்டிக்க முடியும் என்பதை மறுத்து திரைக்கதை கட்டப்பட்டு இறுதியில் முடிச்சு அவிழ்ந்தாலும் திரைக்கதையில் கோணல் தெரிகிறது.

2004 அக்டோபர் “நவீன ஊடகம்” இலக்கிய இதழில் வெளிவந்த கவிதையே இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படமாக வெளி வந்தது என்கிற சிவில் வழக்கு சென்னை 14-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஓ.எஸ்.எண்:11382/2010 ஆக தற்சமயம் நிலுவையில் உள்ளது. இப்பட நாயகனும் அவ்வாறு முயலாமல் பைத்தியமாக மாறுவதனால் மேலும் மூளை திருட்டு அதிகரிக்கவே செய்யும். காவல்துறை நீதித்துறை போன்றவை தமிழ் கதாநாயகனுக்கு கட்டுப்பட்டதாகவே தமிழ் திரைக்கதைகள் கட்டுப்படுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

போராளி - குடை சாய்ந்ததா?


ஐந்து இடங்களில் முத்திரை பதித்த இயக்குநர் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வண்டியை குடை சாய வைத்து விட்டார்

சிலோன் புரோட்டா...

சிரிப்பு வெடி காட்சிகள்

அறையில் அடைக்கப்பட்டுள்ள அக்காவை பைத்தியமில்லை என்று நிரூபிக்கும் காட்சி…. உள்ளிட்ட கைதட்டல் காட்சிகள் படம் முடிய வந்த போதும் …

வன்முறை காட்சிகளிலிருந்து தமிழ் திரையுலகம் மீள வேண்டியது காலத்தின் தேவை.

களவாணி, பாசு என்கிற பாஸ்கரன்… வெற்றிக்கு பின்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே. இயக்குநர் சமுத்திரகனி சசிகுமார் கூட்டணி அடுத்த படத்தில் முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.

இறுதி காட்சியில் விஜய், அஜித், விக்ரம்… உள்ளிட்ட ஹிரோயிச நாயகர்களைக் கடந்து ஐம்பது, அறுபது பேரை அடித்து நொறுக்குவதால் நொறுங்குவது சசிகுமாரின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தான்.

வேலாயுதம் = இரண்டு கிளைமாக்ஸ் ?


தொடர்ந்து தடுமாறிய விஜய்யின் தடுமாற்றத்தை சற்று தடுத்து நிறுத்தி உள்ளது.

ஹீரோயிசத்தை இடைவேளை வரை அடக்கி வைத்து, பின் கடைசிக் காட்சிகளில் கொட்டி தீர்த்து விட்டனர்.

திரைக்கதை முந்தைய நான்கு படங்களுக்கு இது பரவாயில்லை.

ஆயிரமாயிரம் திரைக்கதைக்கான களங்கள் விரிந்து கிடக்கும் தமிழ் இலக்கியச் சோலையில் கதாசிரியர்களுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் தமிழ் திரையுலகம் பல நூறு கோடிகளை இனி வருடம் தோறும் இழப்பதைத் தவிர்க்க முடியாது.

ஒரு கிளைமாக்ஸ் என்ற தமிழ் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டு கிளைமாக்ஸ் உருவாக்கிய முதல் தமிழ் திரைப்படம்

Sunday, December 25, 2011

விளம்பரம் + செலவு = வரவு...?


மது ஒழிப்புக்கும் புகை எதிர்ப்புக்கும்
விளம்பரத்துக்காய்
அரசு செலவழித்த
தொகையினைக் கழித்து
வந்த வருமானத்தை
பட்ஜெட்டுக்காக
கணக்கிட்ட போது
வரவு இருபத்தி நான்காயிரம் கோடி
செலவோ ஒன்றரை கோடி

நம்மூர் அரசியல்வாதி


சுவற்றில் பல்லி
தலைகீழாய் நடப்பது போல
கையில் பசையிருந்தால்
தலைகீழும் கால்மேலுமாய்
நடக்கும்
நம்மூர் அரசியல்வாதி

Thursday, December 22, 2011

வழக்கறிஞர் பீஸ்...?


பங்காளிச் சண்டையில்
மேற்கு பாதை வரப்புக்குப்
போடப்பட்ட வழக்கில்
இரண்டாம் அப்பீல்
உயர்நீதிமன்றத்தில்
தள்ளுபடியான விரக்தியில்
மாரிச்சாமி கிழக்குத் தோட்டத்தை
ஒத்திக்கு வைத்துப்
பணத்தை தயார் செய்தான்
உச்ச நீதிமன்றத்தில் வழக்காட!

எச்சரிக்கை அறிவிப்பு


உயர் லஞ்ச ஒழிப்பு அதிகாரி
வீட்டுக்கு வந்த ஓலையில்
பினாமி பெயரில்
வெளிநாட்டுக் கார்
வாங்கிய வழக்கில்
கட்ட வேண்டிய
வரி பாக்கித் தொகையை
ஒரு வாரத்தில் கட்டவில்லையென்றால்
ஏலத்துக்கு வந்து விடுமென்று
எச்சரிக்கை அறிவிப்பு!

Tuesday, December 20, 2011

குண்டர் சட்டத்தில் தவறு!

கொலை, கொள்ளை வழக்கில்
குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்யப்பட்ட
முனியப்பன்
நீதிபதி முன்பாக வாதிட்டான்
ஐயா எனது எடை
நாற்பத்தெண்பது
தேகமோ ஒல்லியானது
குறைவான எடை கொண்ட
என்னைக் குண்டர் என
தவறாகக் கைது
செய்து விட்டார்கள்...
என்னை நேரடியாகப்
பார்க்கும் நீங்கள்
என் உடலைப் பார்த்து
என்னை விடுவிக்க
வேண்டுமாய் பிராத்திக்கிறேன்
என்றான்!

குமரிப் பெண் தேவை!

பட்டி மன்றத்தில்
பெண்ணுக்கு கற்புதான்
ஆயுதமென்று
கருத்துரையாடிய
மணி வாத்தியார்
மனைவி செத்த
இரண்டாம் மாதத்தில்
இரண்டாவது தாரத்துக்கான
மணமாலையில்
விளம்பரம் தந்தார்!
இருபது வயதில்
அழகான
அடக்க ஒடுக்கமான
குமரிப் பெண்
தேவையென்று!

Monday, December 19, 2011

அப்பா... நாம என்ன சாதி?

தனியார் பள்ளியில்
எட்டாம் வகுப்பு படிக்கும்
என்மகன் கேட்டான்
அப்பா
நாம் எஸ்.சி.யா?
இல்லை பி.சி.யா?
இல்லைஎம்.பி.சி.யா?
ஓ.சி.யா?
எனது வகுப்பில்
என் ஆசிரியர்
கேட்கிராரென்று...?
நான் சொன்னேன்
தமிழராய் நாம் அரசாண்ட போது
அரசசாதி!
சேர சோழ பாண்டிய அரசு
வீழ்ந்த போது
நாம் சூத்திர சாதி!
தந்தை பெரியாரும் அம்பேத்கரும்
எழுந்த போது
நாம் போராளி சாதி...
அவன் சொன்னான்
கமல் மாதிரி
புரியாமல் பேசுகிறீர்களே...
அப்பா என்னை ஆளைவிடு!

Saturday, December 17, 2011

தி. மு. க. ச. கதை கேளுங்கள்....


மாறன்பட்டி என்று சொன்னவுடன் சுத்துபட்டி பத்து கிராம மக்களுக்கும் நினைவுக்கு வருவது அவ்வூரில் அரங்கேறும் விறு விறு அரசியல் திருப்பமும், புதுப்புது நிகழ்வும் தான் ஊருக்கு நடுவே மந்தையில் விரிந்து பரந்திருக்கும் ஆலமரமும் சாவடியும் தான் தி.மு.க.சவின் தலைமைச் செயலகம்.

தி.மு.க.ச என்றால் திருந்தியோர் முற்போக்குக் கட்டுப்பாட்டு சங்கம். மாறன்பட்டி கிராமத்தில் தி.மு.க.ச உருவாக, கால ஆரம்ப நிகழ்வுகளை நிறுத்தி சொல்ல வேண்டுமென்றால் ஐயா நெடுஞ்சுடரால் மட்டுமே முடியும். அறுபது வருட உள்ளுர் அரசியல் நிகழ்வுகளை மறக்காமலும் மறைக்காமலும் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஊர்ச் சாவடியில் ஐயா நெடுஞ்சுடர் துண்டை விரித்து அமர்ந்து விட்டாரென்றால் இளவட்டங்களும் ஊர் பெரிசுகளும் மந்தையை அடைத்து அமர்ந்து விடுவார்கள். பருத்திக் காட்டுக்கு கொல்லைக்கு போகிறவர்களும் ஆய அடக்கிக்கிட்டு மந்தையில் ஒக்காந்திருவாக… வகைக் கொன்றாய் கிளையில் அமர்ந்திருக்கும் பறவைகள் கூட கத்தறது நிறுத்தி செருமிக்கிட்டே, ஐயா பேசத் தொடங்கினா சுதந்திர கால மாறன்பட்டியிலிருந்து தொடங்கி கதை இன்னிக்கு வரைக்கும் ரயில்பெட்டி கணக்கா கோர்வையா கேக்கிறவ காதுல தேனா வந்து பாயும்.

மாறன்பட்டியில மொதல்ல தி.மு.க.ச நொடிந்த காலம் பூசாரிக தொல்ல நெறஞ்ச காலம் கெழக்கு கம்மா பூசாரி, காளியாத்தா கோவில் பூசாரி, கரட்டு முண்டக்கண்ணி கோவில் பூசாரின்று ஒரே பூசாரிக நாட்டாமை பராசக்தி கணக்கா பூசாரிக கொட்டத்த ஒடுக்க தெற்கு தெரு சாமிராமைய்யா கையில் தடியிடுத்து களமிறங்க, பூசாரிகளுக்கு ஆதரவா மன்னரு கோபாலரு களமிறங்க ஊரே ஒரு கருத்துச் சண்டையா கெடக்கும்.

கடவுள் இல்லையென்று சொன்னவன் யாரடா?

தில்லையில் போய் பாராடா..

கடவுள் இல்லையென்று சொன்னவன் நானடா?

தில்லையில் இருப்பது வெறும் கல்லடா?

அவங்க போடற கருத்து சண்டையிலதான் ஊரு சணம் புதுசு புதுசா வெசயத்த தெரிஞ்சிக்கிட்டாக

ஒழுங்கா போயிக்கிட்டிருந்த வண்டி எப்ப கொட சாய்ஞ்சிதுன்னா … ஐயா சாமிராமைய்யாக்கிட்ட இருந்தவருல்ல முக்கியமானவரு துரை அண்ணாச்சி.. அவரு மந்தையில பேசப் போறாருன்னா… சுத்துட்டி கெராமமே மாறன்பட்டியில கூடி ஊரே திருவிழா கணக்காயிருக்கும். மொத மொதல்ல உள்ளுர் பஞ்சாயத்து தேர்தல்ல நின்று மன்னர் கோவாலய்யா உருவாக்கின சங்கத்த தோக்கடிச்சு பஞ்சாயத்தை தி.மு.க.ச. புடிச்சிது. அவரு பெரசிடண்டாகி அல்லா கம்மாவையும் தூருவாரி ஊரே பச்சப்பசேலுன்னு இருந்திச்சு கம்மா நிறைய கெண்டையும், விராலும், சுறாவும் வாளையும் கெடந்து குதிக்கும். ஊருல எங்க திரும்பினாலும் ஒரே பருத்தி மண்டி கடை, அரிசி மண்டி கட, கடலமண்டி கடன்னு…. செழிப்பா கிடக்க.. ஊருக்காரங்க மதிய சாப்பாட்டுக்கு களப்பு கடைக்கு போவாங்களாம். எந்த பூசாரிப்பய செய்வென வெச்சானோ தெரியல திடீருன்னு துரையண்ணாச்சி செத்துப் போக ஊரு பூரா சனக்காடு மாருலயும் வவுத்திலயும் அடிச்சித் துடிச்சிப் போச்சி.

ஊரு முழுக்க எழவு மேகம் கூடி நின்னுச்சி. ஐயா போனதும் பாதி உசிராயிருந்த சனக்காடு கொஞ்ச கொஞ்சமா மனச தேத்திக்கிட்டு தி.மு.க.ச வுக்கு புதுசா ஐயா கருணாகர பாண்டியன தலைவரா தேர்ந்தெடுத்தாக.

கத சூடு பிடிக்க ஊரு மந்தை பூரா ஐயா நெடுஞ்சுடர் வாயைப் பாக்க .. ஐயா தொடர்ந்தார்… தி.மு.க.ச.வில பெரிய்ய பெரிய்ய ஆளுக யிருந்தாலும் அதில கருணாகர பாண்டியன் கொஞ்சம் வெவரமானவரு. அவருக்கு பழக்க வழக்கம் அதிகம். தந்தி ஆபீசில வேல பார்த்த வெள்ளத் தாடிக்காரரு சப்போட்டா இருந்தாரு. ஒரு வழியா கருணாகர பாண்டியன் பெரசிடண்டாகி நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு.. திடீர்ன்னு எவனோ ஒரு பூசாரி செய்வன வெய்க்க ஊருக்குள்ள அரிசித் தட்டுப்பாடு. எங்கன பார்த்தாலும் கப்ப கெழங்கு.. அரிசி கட்டுபாட்ட தீர்க்க முடியில்ல..

திடீருன்னு பார்த்த ஜில்லா காரங்க எல்லாப் பஞ்சாயத்தையும் கலைச்சு புட்டாக. ஏற்கனவே சந்திரன் ஐயா தி.மு.க.ச வில யிருந்து பிரிஞ்சு அ.தி.மு.க.ச ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிக்க ஊரு எலந்தாரி பூரா ஐயா சந்திரன் பின்னால போக பொளப்பே நாறிப் போயிருமென்று ஐயா கருணாகர பாண்டியன் கலங்கி கிடக்க பொசுக்கினு ஜில்லாக்காரங்க .. எல்லா பஞ்சாயத்தயும் கலைக்க

உள்ளதும் போச்சுடா என் சென்றாயா - ன்னு ஐயா கருணாகர பாண்டியன தலயில துண்ட போட்டு ஓரமா ஒக்காந்து யோசிச்சாரு..

அம்மள கலைச்சி ஜில்லாகாரய்ங்க மண்டய ஒடய்க்காம விட மாட்டேன்னு தி.மு.க.ச காரங்க களமிறங்க பதிலுக்கு ஜில்லா காரங்க களமிறங்க… ஒரே அடிதடி… தி.மு.க.ச காரங்களுக்கும் ஜில்லா காராய்ங்களுக்கும் சரி சமமா அடி உழுந்திச்சு”

ஏற்கனவே சந்திரன் ஐயா நொம்பலம் பத்தாதுன்னு, மாவட்ட பஞ்சாயத்துகாரய்ங்க நொம்பலம்- போதுமடா சாமி… ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கம்மா ஓரத்தில நின்னு யோசிச்சிக்கிட்டு நிக்கறப்ப பொசுக்குன்னு ஜில்லா காராங்க பஞ்சாயத்து தேர்தல அறிவிச்சி புட்டாக.

ஏற்கனவே ஐயா கருணாகர பாண்டியன் தலைமையில இருக்கிற தி.மு.க.ச. வும், ஐயா சந்திரன் தலைமையில யிருக்கிற அ.தி.மு.க.ச வும் சரிமல்லுக்கு நிக்க ரெண்டு பேரும் ஊரு மந்தையில மாறி மாறி செலம்பாட ஒரு வழியா தேர்தல் முடிஞ்சு முடிவுக்காக ஊரு சனமே மந்தயில கூடி கெடக்காய்ங்க.. தேர்தல் அதிகாரி சரிய்யா சாயந்திரம் நாலு மணிக்கு முடிவ அறிவிச்சாக

ஐயா சந்திரன தூக்கிக் கிட்டே நாடே கோ… கோ …ன்னு உச்சியில தூக்கி வெச்சி .. கொண்டாடிச்சி.. எங்கு பார்த்தாலும் சனக்காடு மாலையையும், பூவையும் போட்டு ஐயா சந்திரன வரவேற்க … கருணாகர பாண்டியன் ஐயா.. நமக்கெதுக்குடா வம்புன்னு பேசமா ரெண்டு புத்தகத்தையும் பேனாவையும் எடுத்திக்கிட்டு கரட்டோரமா ஒதுங்கிட்டாரு. எங்கன பார்த்தாலும் எல தலயா மொழச்சி ஊரே பச்சப்பசேலுன்னு கெடந்திச்சு..

எப்ப பாரு ஊருக்குள்ள பஞ்சாயத்து எலக்சன் வந்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு சந்திரன் ஐயா ஜெயிச்சிப்புடுவாரு..

ஏழபாழய்களுக்கு ஏதாச்சும் செய்யாட்டி ஐயா சந்திரனால தூங்க முடியாது. ஊருளவுள்ள அத்தன சாதி சனமும் ஐயா மேல உசிராயிருந்தாக. ஐயா கருணாகர பாண்டியன் என்னென்னமோ செஞ்சி பாத்தாக.. மிசுங்க கூட முடியல..

அம்ம கையில என்னயிருக்கு. வர்றது வறட்டும்ன்னு ஐயா கருணாகர பாண்டியன் கெடக்க..

கொல்லயில போற காலன் நல்லவக வுசிர எடுக்கதுக்குன்னு வந்து ஐயா சந்திரன் வுசிர பறிக்க பத்து நாளக்கி ஊரு பூரா ஒவ்வொரு வீடும் எழவு வீடு கணக்கா துடிதுடிக்க… பொசுக்கின்னு ஜில்லா பஞ்சாயத்துக்காரய்ங்க பெரசிடெண்ட் எலெக்சன அறிவிச்சிப்புட்டாக..

“இந்த வாட்டி யில்லைன்னா அப்புறம் எந்த வாட்டியும் பெரசிடெண்டா ஆக முடியாதுடா கார்மேகம் ன்னு ஐயா கருணாகர பாண்டியன் எலந்தாரி கணக்கா நிக்க.. ஒரு வழியா பழய்ய பெரசிடெண்ட் பதவிய ஐயா கருணாகர பாண்டியன் புடிய்க்க … தி.மு.க.ச காரங்க மந்தையில துள்ளி துள்ளி குதிச்சாக..

ராமன் வனவாசம் போன கணக்கா சும்மா பன்னிரெண்டு வருசமா காய வுட்டுபுட்டாகப்பா.. ன்னு ஆனந்தமா கூத்தாட

எந்த பூசாரிப் பய செய்வென வெச்சானே தெரியல… பொசுக்குனு ஜில்லாகாராய்ங்க ஒரே வருசத்தில பஞ்சாயத்த கலைக்க … தி.மு.க.ச. காரங்களுக்கு அழுக அழுகய்யா வந்திச்சி.

அதுக்கப்பறகு வந்த பெரசிடெண்ட தேர்தல்ல தி.மு.க.ச. தோக்க.. ஒரு மனுசனுக்கு இம்புட்டு சோதனையாடா வரணுமன்று… ஐயா கருணாகர பாண்டியனப் பாத்து அவங்க சங்கத்து காரங்கெல்லாம் ஆதங்கப் பட்டாக.

பெரசிடண்டு சேர எலந்த துக்கத்தில யிருந்த ஐயா மீளுறதுக்குள்ளார தி.மு.க.ச.வில பெரிய்ய ஆள வளந்திட்டு வந்த சாமி கோவாலு ஐயா வாட்ட சாட்டமா ஐயாட்ட மொரண்டு பிடிச்சிக்கிட்டு தோளில்ல கெடந்த கருப்பு துண்ட ஒதறி தள்ளிட்டு தெரு தெருவா போயி மொறயிட எளந்தரிக்க பூரா ஐயா சாமி கோவாலு பக்கம் சாய ஐயா கருணாகர பாண்டியன் “அம்மளுக்குன்னு யிம்பிட்டு சோதனையா வரணுன்னு கம்முன்னு மூலையில ஒக்காந்திட்டாரு”

எங்கிட்டிருந்துதான் காத்து அடிச்சிதோ தெரியில்ல.. எந்த அண்ணா மலசாமி புண்ணியமோ தெரியல… அடுத்து வந்த பெரசிடெண்ட் எலெக்சன்ல சைக்கிள்ள வந்த கருப்பசாமி ஐயா கருணாகர பாண்டியன் ஐயாவுக்கு கை கொடுக்க பழயபடி ஐயா பெரசிடெண்ட் ஆனாரோ யில்லையோ! ரொம்ப உசாராயிட்டாரு.

எப்பபாரு யிந்தா ஜில்லா காரய்ங்க அம்மகிட்டயே ஒரண்டயிழுத்து முழுசா ஐந்து வருசத்த முடிக்கவுடாம பண்ணுதுக யிந்த மொற ஜில்லா காராய்ங்களோட மோதறத நிறுத்திக்கிட்டு ராசியா போயிறுவோம்னு ஓசிக்க ஆரம்பிச்சாரு..

அப்புறம் பாத்தா ஒருக்க மாத்தி ஒருக்கன்னு தி.மு.க.ச.வும் அ.தி.மு.க.சவும் மாறி மாறி பஞ்சாயத்த புடிச்சிகிட்டு; அவகவகளுக்கு உள்ளது அவவகளுக்குன்னு ஊருக்குள்ள யிருந்தாக..

எடயில ரெண்டு பேருமா… மாத்தி மாத்தி சண்ட போட்டாலும் யாருக்கும் சேதாரம் இல்லாமத்தான் இருந்திச்சி. ஆனா போன பெரசிடெண்ட் எலக்சன்ல தி.மு.க.ச. செயிச்ச பின்னால சங்கத்து காரக ஆட்டத்தினால வண்டி கொஞ்சம் கொட சாஞ்சி போச்சி

கூட பொறந்ததுக.. கட்டயில போறதுகன்னு புதுசு புதுசா சங்கத்துக்காரங்க மெம்பரா சேர பழய சங்கத்து மெம்பருக்கு மருவாதியில்லாம போச்சி கத்தி, கம்பு, ஆட்டம்னு அதுக அதுக ஆட்டம் போட்டிச்சிக.. தாட்டியம்னா தாட்டியம் அம்புட்டு தாட்டயம்

சும்மா தூர் வார்றதுலயிருந்து, கக்கூஸ், தெரு விளக்கு அங்க யிங்கன்னு சங்கத்துகாரக கைவெய்க்க.. இந்த வருச எலெக்சன்ல தி.மு.க.ச.வோட குடியே முழுகி போச்சி “எலெக்சனுக்கு முன்னால அப்பப்ப நடந்த வார்டு தேர்தல்ல போடு போடுன்னு போட்ட தி.மு.க.ச. பஞ்சாயத்து பொது தேர்தல்ல குப்புறக்க படுத்த பாய்ச்சான் கணக்கா எந்திரிக்க செறம படறமாதிரி ஆயி போச்சி. ஏண்டா யிப்படின்னு பின்னால திரும்பி பாத்த பின்னாலதான் தெரிஞ்சிச்சி

“சங்கத்து காராக அஞ்சி வருசமா போடு போடுன்னு புகுந்து வௌயாடியிருக்காக”

இப்பெல்லாம் ஊருக்குள்ள போலிசு அடிக்கடி வருதுக … கேஸ் கீஸ்..ன.னு தி.மு.க.ச. வ போட்டு உலுப்பு உலுப்புன்னு உலுப்பி எடுக்கிறாங்க..

போன பீரியடுல்ல ஐயா கருணாகர பாண்டியன பாத்து சல்யூட் அடிச்ச போலிசெல்லாம் இப்ப அய்யாவ பாக்கறப்பெல்லாம் மொறய்க்கற மாதிரி இருக்குது. இப்பெல்லாம் ஐயாவுக்கு போலீச பாத்தாவே புடிக்க மாட்டீங்குது.. உள்ளுர் போலிசு தான் மோசம்னா வெளியூர் போலீசு ரொம்ப மோசம்.

போர போக்க பாத்தா சங்கம் பூரா ஜெயிலுக்கு போயிருமோன்னு பயமாயிருக்கு … பேசாம அடுத்த சஙகப் பொதுக்குழுவ பாளையங்கோட்டையிலேயோ வேலூரிலயோ போட்டோ கூட ஆச்சர்யப் பட முடியாத அளவுக்கு நெலம படு சோசம்.

ஆறாவது நமக்கு ஆதரவா பேசுவாங்கன்னு பாத்தா ஒரு பய கூட சொய மரியாதையோட வாழறவன் மாதிரி தெரியல.. பண்பாட்ட தொலச்சது மில்லாம.. பவத்தறிவயும் எழுந்து புடிச்சீக… மூதேவிக.. ஊருக்குள்ள எல்லா பயலுகளுக்கும் ஈரல் கெட்டு போச்சின்னா வசலா முன்னு பாத்தா .. பயம்மா யிருக்கு.. ஏன்னா முன்னம் கணக்கா ஏது சொன்னாலும் பய புல்ல மனசுக்குள்ளேயே வெச்சிபுட்டு ஓட்டு போடாம டயத்துல ஆப்படிக்குதுக. ஏற்கனவே நம்மூருகாரகள வெளியூருக்காரய்ங்க கொத்து கொத்தா கொன்னப்ப எதுக்கு மாவட்டத்து பஞ்சாயத்த பகக்கணும்னு நம்ம பேசாம யிருந்தது எம்புட்டு பெரிய்ய தப்புன்னு இப்பத்தான் தோணுது. கூடாநட்பு நம்மள இங்க கொண்டு உட்டுபுடிச்சி.. ன்னு ஐயா அழுதாலும் சிந்தறதுக்கு ஆளில்லை.

அ.தி.மு.க.ச காரக ஏதாச்சும் தப்பு பண்ணா பழயபடி நம்ம தெசயில காத்தடிக்குமான்னு ஐயா கருணாகர பாண்டியன் கண்ணாடிய கழட்டிக் கழட்டிப் பாக்கிறாரு. ஊரு பஞ்சாயத்து ஸ்கூல்ல வந்த பொத்தக பிரச்சனையை வெச்சி ஒரு வருசத்த கடத்திப்புடலாமுன்னு பாத்தா ஊரு நாட்டாமக பொசுக்குனு சோலிய முடிக்கிறாப்ல தீர்ப்ப வேற சொல்லிபுட்டாக..

அருகில் இருக்கிற பரமத்தியில துப்பாக்கிய வெச்சி பஞ்சாயத்துக் காரக வெறட்டுனத வெச்சி பொளப்ப நடத்தலாம்ன்னு பார்த்தா இப்ப நடந்த உள்ளுர் வார்டு எலெக்சன்ல தி.மு.க.ச. ஆப்படிச்சிபுட்டாக..

அ.தி.மு.க.ச காரக நம்ம மேல இம்புட்டு காண்டமா கெடக்கய்ல்ல.. நம்ம சங்கத்துக் காரக ஒண்ணா நிக்கலாமுன்னு பாத்தா காச பாத்தது ஒவ்வொண்ணா கழற பாக்குது.

கையக்கட்டி ஓட விட்டாக, கால கட்டி ஓட விட்டாகன்னு எம்புட்டு தான் தொல்காப்பிய நடயில எழுதினாலும் கடந்த வார்டு எடைத்தேர்தல்ல நம்ம பண்ண அக்கிரமத்த ஊரு காரக மறக்க மாட்டீங்குதுக..

ஐயா நெடுஞ்சுடர் கதய முடிக்க போறத தெரிஞ்சிக்கிட்டு சாவடியில ஒக்கார்ந்திருந்த தி.மு.க.ச. காரர்களும் அ.தி.மு.க.ச காரர்களும் எந்திரிக்க தோதா துண்ட ஒதருனாக.

போன பீரியடில்ல பாத்தியா தி.மு.க.ச. காரகளுக்கு எம்புட்டு சவுரியத்த பண்ணிக் கொடுத்து அவகவக வாய்க்கு ருசியா.. தின்னிருக்காக நம்ம சங்கத்தை பார்த்தியா.. நம்மள கொஞ்சமாவது திங்க வுடுதுகளா… தி.மு.க.ச. கணக்கா வுடாட்டியும் பரவாயில்ல .. ஏதாச்சும் கொஞ்சமாவது அங்ஙன யிங்கனயாவது மேயவுட லாம்ல்ல- ன்னு அ.தி.மு.க.ச. காரக பேசிக்கிட்டே கௌம்ப

திடுதிப்புன்னு ஏறுன கட்டணத்தைப் பாத்து தி.மு.க.ச. காரங்க செத்த மூச்ச உள்ள இழுத்திட்டு சொன்னாக “ஊருக்குள்ள எம்புட்டு பேர பாத்திருப்பாரு அவரோட அனுபவம் சங்கத்த காப்பாத்தணும். அடுத்த பிரசிடெண்ட் எலெக்சன்ல்ல செய்கிரதுயிருக்கட்டும் இப்ப செயில்ல இருக்க நம்ம சங்கத்துகாரகள பெயில்ல எடுத்து கேஸ் - தண்ணியில்ல யிருந்து மொத காப்பாத்தி நம்ம சங்கத்த கர சேக்கணும்ன்னு ஆத்தா மாரியாத்தாள வேண்டிகிட்டு தி.மு.க.ச. காரக வெரசா மந்தய விட்டு வீட்டுக்கு நடந்தாக. மனசாட்சி வுள்ள தி.மு.க.ச.காரங்க அன்னிக்கு அம்ம வீரத்த கோர்ட்ல்ல காட்டினோம். இன்னைக்கு நீதிமன்றத்த வெச்சி நம்ம மானத்த காப்பாத்தறோம்.

கறுப்பு சட்டையில ரத்த கரய உண்டாக்கினோம். இப்ப கறுப்பு சட்டயில்லைன்னா நம்மள கோவணத்த கழட்டி வெளுத்திருப்பாக.. ன்னு சொல்லிட்டே வீட்ட நோக்கி....

Friday, December 16, 2011

7 ஆம் அறிவு திரைப்பட இயக்குனருக்கு சில கேள்விகள்


சமூகப் பிரச்சனைகளைத் தொட மறுக்கும் தொடை நடுங்கி திரைப்பட உலகத்தினைக் கடந்து துணிவுடன் விமர்சித்த தமிழன் முருகதாசுக்கு முதலில் வீர வணக்கத்தை செலுத்தி விட்டு இயக்குநர் முருகதாசுக்கு வருவோம்.

முதல் இருபது நிமிட திரைப்படம் … கடைசி பத்து நிமிட திரைப்படம் .. இரண்டுக்கும் சேர்த்து இயக்குநருக்கு 90/100 வழங்கி விடலாம். இடையில் ஒரு ஒண்றரை மணி நேர திரைப்படத்திற்கு நாம் மைனஸ் 30 தரலாம்.

90/100 - 30/100 = 60/100

ஆக மொத்தம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திரைப்படம் என்ற போதும் இயக்குநர் முன்பு நாம் வைக்கும் கேள்விகள்...

1. படத்தின் விறுவிறுப்பை உருவாக்கிய சீன உளவாளி நம் தேசத்திற்குள் வருவதற்கு முன் 1 மணி நேர திரைப்படம் ஓடி விடுகிறதே...?

2. சீன உளவாளி ஒரு காவல்நிலையத்தையே சுக்கு நூறாக்கி விட்ட பின்பும் காவல்துறை அவரை துரத்தாமல் இருப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதே...?

3. போதி தர்மன் எனும் கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, சராசரி காதல்... சராசரி காதல் தோல்விப் பாடல்... சராசரி டூயட் ... என்று ஒரு மணி நேர விரயத்தை தவிர்த்து சீன உளவாளியை முன்பே களமிறக்கி... தோழா! தோழா! பாடல் தவிர்த்து அனைத்துப் பாடலையும் நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்குமே...?

4. ஊடகங்களும் விமர்சனங்களும் ஆஹா ஓஹோ வென சுருதிஹாசனை உயர்த்தி பிடிக்கும் போது நமக்கு ஓர் விசயம் நினைவுக்கு வருகிறது.

“சலங்கை ஒலி” திரைப்படத்தில் நடன கலைஞர் (எஸ்.பி.சைலஜா) நடனத்திற்கு கமல் ஒரு விமர்சனத்தை தனது பத்திரிகையில் பதிவு செய்திருப்பார். அந்த விமர்சனத்தைப் பார்த்து எஸ்.பி.சைலஜா கொதித்துப் போய் கமலின் பத்திரிகை அலுவலகம் வந்து பேயாட்டம் போடுவார். பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்... என்ற வரியினை சுட்டிக்காட்டி கமல் விளக்கும் காட்சி … திரையரங்கே அதிரும்….

சுருதிஹாசனின் நிலையும் அதே நிலை... ஆரம்பம் முதல் கடுமையான முயற்சி செய்து பார்த்தும் நடிப்பு வரவில்லை இருந்தும் பார்வையாளர்கள் அறியா வண்ணம் கமல் மீதுள்ள நேசத்தில் இயக்குநர் முழுவதும் வெளியில் தெரியா வண்ணம், சுருதிஹாசன் பாத்திரத்தை சூர்யாவுக்கு நிகராக இயக்குநர் கட்டமைத்து மறைத்து விட்டாரே..?

5. போதி தர்மனாக எழும் போது சூர்யாவின் கண்களில் உள்ள ஈர்ப்பு, இதர காட்சிகளில் இல்லையே…?

எது எப்படி இருந்த போதும் ! ஒரு புதுமையான திரைப்படத்தை தமிழருக்கு அளித்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் திரைப்பட கலைஞர்களையும் உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும். குறிப்பாக தமிழ் சார்ந்த வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.

“ஈழத்தமிழர் பிரச்சனை” தேசிய இன கண்ணோட்டம்.

மொழிவழி தேசியம்...! என தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய வழியை .. இப்படம் காட்டியுள்ளது. முதுகெலும்பு இருந்தும் தொடை நடுங்கி தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் முருகதாஸ் தமிழ் தேசியத் தலைவனின் தம்பியாய் காட்சியளிக்கிறார்.

மலையாளக் கட்சிகளும், மதராசபட்டினக் கட்சிகளும்


மலையாளி வாய்க்கு ருசியாக
அரிசி படைக்கும் தமிழனுக்கு
முல்லைப் பெரியாறை மூடி
வாய்க்கரிசி போடுவதில்
அச்சுதானந்தனாயிருந்தாலும்
உம்மன் சாண்டியாக இருந்தாலும்
நாளை அக்கா ஷகீலா வந்தாலும்
மலையாள அரபிக்கடல் கட்சிகள்
ஒன்றுபட்டுக் கரம் கோர்த்து
வீதிக்கு வந்து ஒன்றுபட்ட பின்பும்
கூறு போட்டு பிரிந்து கிடக்கும்
எம் மதராசபட்டின கட்சிகளோ
கைகளில் குஷ்டம் பிடித்த பீடிகையில்
கரங்கள் இணையாது
தனித்தனியாய்க் கூவிக் கூவி
கூவமாய் நாறுவதால்
இனி தமிழ் மெல்ல சாகுமா
இல்லை தமிழரின் நீராகார உரிமை சாகுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

Monday, December 12, 2011

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்


தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தாலும் தமிழர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாமல் போவதற்கு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள்தான் காரணம்.

முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதென பொய் திட்டங்களைத் தீட்டி, ரகசியமாக அமுல்படுத்துவதும் மலையாள அதிகாரிகள் குழுதான்.....

மத்திய அரசின் ஆதிக்க வர்க்கத்தில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல் இதோ....

1. என். பெர்னாண்ட்ஸ் - இந்திய ஜனாதிபதியின் செயலாளர்.
2. வி. கே. தாஸ் - இந்திய ஜனாதிபதியின் தனிச் செயலாளர்.
3. டி. கே. ஏ. நாயர் - இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர்.
4. என். நாராயணன் - இந்தியப் பிரதமரின் முக்கிய ஆலோசகர்.
5. பி. ஸ்ரீதரன் - இந்திய மக்களவைச் சபாநாயகரின் தனிச் செயலாளர்.
6. கே. எம். சந்திரசேகர் - இந்திய அமைசரவைச் செயலாளர்.
7. ருத்ர கங்காதரன் - இந்திய விவசாயத்துறைச் செயலாளர்.
8. மாதவன் நம்பியார் - இந்திய விமானப் போக்குவரத்துத்துறைச் செயலாளர்.
9. நிரூபமா மேனன் ராவ் - முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் & தூதர்
10. சத்திய நாராயண தாஸ் - இந்திய கனரகத் தொழிற்துறைச் செயலாளர்.
11. ஜி. கே. பிள்ளை - இந்திய உள்துறைச் செயலாளர்.
12. சுந்தரேசன் - இந்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர்.
13. கே. மோகன் தாஸ் - இந்தியக் கப்பல்துறைச் செயலாளர்.
14. பி. கே. தாமஸ் - மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் (தற்போது பதவியில் இல்லை...?)
15. சுதாபிள்ளை - இந்தியத் திட்டக்குழுவின் செயலாளர்
16. வி. கே. சங்கம்மா - இந்திய வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர், செயலாளர்.
17. ஆர். கோபாலன் - இந்திய நிதிப்பணிகள் துறை இயக்குனர்.
18. கே. பி. வி. நாயர் - இந்திய செலவீனங்கள் துறைச் செயலாளர்.
19. கே. ஜோஸ் சிரியாக் - இந்திய வருவாய்த்துறைச் செயலாளர்.
20. ஆர். தாமஸ் - இந்திய வருமானவரித் துறைச் செயலாளர்.
21. வி. ஸ்ரீதர் - இந்திய சுங்கத்துறைச் செயலாளர்.
22. பி. கே. தாமஸ் - இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.
23. ஏ. சி. ஜோஸ் - இந்தியக் கதர் வாரியச் செயலாளர்.
24. சி. வி. வேணுகோபால் - இந்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகச் செயலாளர்.
25. ஸ்ரீ குமார் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய இயக்குநர்.
26. கோபாலகிருஷ்ணன் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய மூத்த அதிகாரி.
27. நந்தக் குமார் - இந்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர்
28. ரகுமேனன் - இந்திய செய்தி ஒலிபரப்புத்துறைச் செயலாளர்.
29. ராமச்சந்திரன் - இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்.
30. ரீட்டாமேனன் - இந்திய ஜவுளித்துறைச் செயலாளர்.
31. விசுவநாதன் - சட்டத்துறைச் செயலாளர்
32. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

அமைச்சர்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 உறுப்பினர்களில் கேரளாவிலிருந்து 20 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் 15 உறுப்பினர்கள். இவர்களில் 5 நபர்கள் அமைச்சர்கள்.

1. ஏ. கே. அந்தோணி - இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்.
2. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர்.
3. கே. வி. தாமஸ் - இந்திய விவசாயத்துறை இணை அமைச்சர்.
4. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் - இந்திய இந்திய உள்துறை இணை அமைச்சர்.
5. அகமது - இந்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர்.

மிக முக்கியமானவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வீட்டில் அவரது கார் ஓட்டுநர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கனக்குட்டி, தோட்டக்காரர் தாமஸ் என்பவர்களுடன் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாம். இதையெல்லாம் படித்த பிறகும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

(தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலிருந்து...)

Wednesday, December 7, 2011

5.வருணாசிரம தர்மம் அன்றும் இன்றும்


வருணாசிரம முறைதான் தி.க. வினர் மிகக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. அது அன்றுபோல் இன்றும் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். அது உண்மைக்குப் புறம்பானது. இன்று பிராமண சாதியினர் என்று ஒரு பிரிவினா; உள்ளனர். அதுதான் வருணாசிரம தர்மம் என்றால் இவர்கள் வருணாசிரம தர்மத்தையே புரிந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் சென்றவிடமெல்லாம் வருணாசிரம முறை தோன்றவில்லை. அங்கு இருந்த வெள்ளை நிறத்தவரோடு ஐக்கியமாகிவிட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்த போதுதான், இங்கு வந்து சேரும் முன் புரோகிதம் செய்யும் பிராமணர்களாகவும், போர் புரியும் சத்திரியர்களாகவும், பிரிந்திருந்த ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ச்சியடைந்திருந்து வேளாண்மையிலும் வர்த்தகத்திலும் ஈடுபட தங்களில் ஒரு பிரிவினரை வைசியர்களாக்கினர். இங்கு வாழ்ந்து வந்த பூர்வீகக்குடி கருப்பு நிற மக்கள் மீது ஆதிக்கம் பெற்ற அவர்களை தாசர்களாக - சூத்திரர்களாக உடலுழைப்புப் பணிகளுக்காகத் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு தான் நால் வருணம் தோன்றியது. உண்மையில் இருவருணம்தான். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தான் மூன்று வருணத்தினராயினர். ஒவ்வொரு கோத்திரத்திலும் இந்த வருணத்தினர் இருந்தனர். அன்றைய உற்பத்தி முறையின் வளர்ச்சி நிலையிலிருந்து இது தோன்றியது. இதில் பிராமணர்கள் வேதம் கற்ற புரோகிதர்கள் என்ற முறையில் மேலாதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் தான் முற்றாக உடலுழைப்பில் ஈடுபடாதோர். நான்கு ஆசிரம வாழ்க்கை என்பதும் இவர்களுக்குத்தான் பொருந்தக் கூடியதாக இருந்தது. வாழ்க்கையின் நான்கு கட்டங்கள் என்பதுதான் இதன் பொருள். பிரம்மச்சாரியம் (மாணவப்பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வானப் பிரஸ்தம்(காடுறைதல்) சன்யாசம் என்பதே நான்கு ஆசிரமங்கள் ஆகும்.

மாணவப் பருவம் 12 ஆண்டுகள் மரத்தடியில் குருவின் பக்கத்தில் அமர்ந்து வேதம் கற்க வேண்டும். அன்று பிராமணர்கள் அனைவருக்கும் இது கட்டாயமாக இருந்தது. இன்று எத்தனை பிராமணர்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். கான்வென்ட் பள்ளிக்கல்லவா பிள்ளைகளை அனுப்புகின்றனர். இல்லற வாழ்க்கைக்குப் பிறகு எத்தனை பிராமணர்கள் காட்டு வாழ்க்கைக்கு செல்கின்றனர். இங்கு கல்வி முடித்தவுடன் ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ தானே செல்கின்றனர்! அதே போல் கடைசி கட்டமான சன்யாச வாழ்க்கைக்கு எத்தனை பிராமணர்கள் செல்கின்றனர்? ஓய்வுக் கால வாழ்க்கையை நகரங்களில் வசதியான முறையில் தானே கழிக்கின்றனர். ஒரு “தர்மம்” என்ற முறையில் பிச்சையெடுத்துண்ண எந்த பிராமணன் செல்கிறார்? இதர சாதியினரைப் போல ஏழைப் பிராமணர்கள் எல்லா வயதினரும் பிச்சை எடுத்து வாழ்வதைப் பார்க்கின்றோம். பிராமணன் என்பதற்கு அடையாளமாக பூணூல் ஒன்றுதானே மிச்சம்! பிராமணரல்லாத சில சாதியினரும் பூணூல் அணிகின்றனர். பூணூல் இன்றைக்கு சமூக அந்தஸ்தைத் தீர்மானிப்பதாகவும் இல்லை. இதர சாதியினர் அதற்கு எந்த மதிப்பும் அளிப்பதாகவும் இல்லை. உண்மையில் அது ஒரு கேலிப்பொருளாகியுள்ளது. (மார்க்சிஸ்ட் ஏப்ரல்-94 பக்கம் 40)

நம் இந்திய பூமியில் சாதிகள் இருக்கக்கூடாது என்பது நேர்மையானது. ஆனால் இன்றைய இந்திய சமூகத்தில் சாதிகள் பலமாக உள்ளது என்பதை ஒத்துக் கொண்டால்தான் சாதிகளற்ற சமூகம் என்னும் புள்ளியை நோக்கி இந்திய சமூகத்தை நாம் நகற்ற முடியும். வர்க்கம் தான் இந்த மண்ணில் உள்ளது என்று வாதிடும் இடது சாரிகள், இன்று கட்சிக்குள் தலைதூக்கியிருக்கும் சாதிய, ராட்சச ஜந்துகளினால் அவதிப்படுகின்றனர். வங்க அமைச்சரோடு இது முடியும் பிரச்சனை கிடையாது. மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. வரதராஜன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகத்தில் பல இடங்களில் நமது கட்சிக்குள்ளே சாதியம் தலை தூக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வேதனையுடன் பரிசீலிக்கிறது என்று கண்டனம் செய்தார். கேரளத்தில் கெளரி அம்மாள் புறக்கணிக்கப்பட்ட போது ஈழுவர்கள் இடதுசாரிகளுக்குத் தந்த நெருக்கடி பின் தோழர் அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பழிதீர்த்துக் கொண்டது ஈழுவர் சமூகம். இந்திய சமூகத்தில் சாதி இல்லை என்று வாதிடும் நபர்கள், சாதி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். சாதி இந்திய சமூகத்தில் பலமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்பவர்களே சாதிகளற்ற சமூகம் நோக்கி பயணிப்பார்கள். இந்திய சாதிகள் பற்றிய சிறு புள்ளி விபரமே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

1980 –ல் மண்டல் குழு சமர்ப்பித்த சில தகவல்கள்


இனத்தின் பெயர் மக்கள் தொகை

அரசு

அதிகாரிகள்

உயர்கல்வி

கற்றவர்கள்

உயர் பதிவியில் உளவர்கள் விவசாயிகள் பூமி

பிராமணர்கள்

3.5%

   41%

   50%

     61%

10%

5%

சத்திரியர்கள்

5.5%

   15%

   16%

     12%

27%

 80%

வைசியர்கள்

6%

   10.5%

   12%

     13%

60%

 9%

சூத்திரர்கள்

52%

    8%

   12%

      7%

1.8%

 4%

சிறுபான்மையினர்

10.5%

    3%

   1.5%

      2%

0.8%

 1%

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

15%

   15%

    6%

      4%

0.3%

 0.5%

பழங்குடியினர்

7.5%

   7.5%

   2.5%

     1%

0.1%

0.5%


மண்டல பரிந்துரைப்படி சத்திரியர்களாக அடையாளப்படுத்தப்படும் 5.5% மக்கள் இந்திய தேசமெங்குமிருந்த குருநில மன்னர்களின் பரம்பரையினர் (மன்னர் மானியம் பெற்றவர்கள்), மத்திய மாநில அரசுகளின் முதல்நிலைப் பணிகளில் உள்ளவர்கள் (இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் வகித்து வருபவர்கள்). மேற்படி குறியீட்டில் 90% ஆரியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள போதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆரியரல்லாத முன்னேறிய சாதியினர் 10% உள்ளனர் என்று புரிந்து கொள்ளலாம்.

6% வைசியர்கள் என்ற பிரிவினில் தேசிய, தரகு, பிராமண முதலாளிகளும், சேட் பிராமணர்கள் அவர்களின் கடைசி பிரிவினராகும் … பிராமணரல்லாத முதல் வைசியர் அநேகமாக மகாத்மா காந்தியாகவே இருப்பார்.

6% வைசியர்களில் பிராமணரல்லாதோர் 1% மட்டுமே இருக்கக்கூடும்.

பள்ளிக்கல்வியில் மாணவர்களின் நிலை (1881-82)

மாணவர்கள்

நடுநிலைப் பள்ளி பயனாளி

உயர்நிலைப்பள்ளி பயனாளி
கிறித்தவர்கள் 1.429 12.06 111 2.26
பார்ப்பனர்கள் 3.639 30.7 1987 40.29
விவசாயிகள் 624 5.26 140 2.85
தாழ்த்தப்பட்டவர்கள் 17 0.14         
பிற்படுத்தப்பட்டவர்கள் 3823 32.25 1573 32.04
முகம்மதியர்கள் 687 5.8 100 2.04
பார்சியர்கள் 1526 12.87 965 19.66
மலைவாழ் மக்கள் 6 0.05 0 0
ஜீக்கள் 103 0.87 92 0.86


இந்திய சுதந்திரப் போரினை சத்திரிய பிராமணர்களையும், பிராமணர்களையும் ஒரு நூலில் கோர்த்து வைசிய பிராமணர்கள் நடத்தி வென்ற பின்பு, இந்திய தேசமெங்கும் பிராமணரல்லாத மக்கள் அரசியலில் குதிக்க ஆரியர்கள் தங்கள் பிடிமானத்தை இழக்கத் துவங்கினர். தென்னகத்தின் காமராசர் டெல்லியில் கால் பதிக்க, பிராமணரல்லாதோரின் வேகம் கூடியது. வைசிய பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்த 14 பெரிய இந்திய ஷெட்யூல் பாங்குகள் (1. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2. பாங்க் ஆப் இந்தியா, 3. பஞ்சாப் நேஷனல் பாங்கு, 4. பாங்கு ஆப் பரோடா, 5. யுனெடெட் கமர்சியல் பாங்கு, 6. கனரா பாங்கு, 7.யுனெடெட் பாங்கு, 8. தேனா பாங்கு, 9. சிண்டிகேட் பாங்கு, 10. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 11. அலகாபாத் பாங்கு, 12. இந்தியன் பாங்கு, 13. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 14. இந்தியன் ஓவர்சீஸ் பாங்கு) அரசுடமையாக்கப்பட்டது. 19-07-1969 ல் ரூ.50 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகள் உள்ள இந்திய ஷெட்யூல்ட் பாங்குகள் மட்டும் விதி விலக்கிலிருந்து தப்பித்தது.

வங்கிகள் தேசவுடமையாக்கப்பட்டதனால் வைசிய பிராமணர்களின் அசுர வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. பின் 2-12-1971 அன்று மத்திய அரசு கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பில் நேரடி பாதிப்பை அடைந்தவர்கள் சத்திரிய பிராமணர்களே. உச்சநீதி மன்றத் தடையினை அடுத்து முறையான திருத்த மசோதா நிறைவேறியது.

சத்திரிய பிராமணனின் தலையில் கை வைத்தபோது கொதிக்கிறது வைசிய பிராமணனின் ரத்தம்.

“தேசம் விடுதலையடைந்த போது சமஸ்தானங்கள் ஆதிபத்திய அதிகாரங்களை மட்டுமின்றி தமது அரசு பொறுப்புகளையும் விட்டுக் கொடுத்து தேசத்தின் ஐக்கியம் துரிதமாகக் கை கூடுவதற்கு துணை புரிந்தனர். இது பெரிய தியாகம் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு இணங்கியதற்காக அவர்கள் நிம்மதியுடன் வாழ ராஜ மானியத்தையும், சில விசேச உரிமைகளையும் அப்போது துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அளித்தார். அவர்கள் யூனியன் சர்க்காருக்கு தமது அதிகாரத்தை மாற்றிய உடன்படிக்கைகளில் ராஜ மானியங்களும், தனி உரிமைகளும் இடம் பெற்றன. அதனை அரசியல் சாசனத்திலேயே இவற்றை சேர்த்து உறுதி செய்திருக்கிறார்கள். சர்தார் அளித்த இந்த இரட்டைப் பாதுகாப்பைத் துச்சமாக மதித்துக் கிழித்தெறிந்து விட்டார் திருமதி. இந்திராகாந்தி. செய் நன்றியை கொன்ற குற்றம் மட்டுமின்றி வாக்கு மீறிய குற்றமும் இதில் சேர்ந்திருக்கிறது. ஆகையால்தான் இது நமது தர்மத்துக்கும் பண்பாட்டுக்கும் புறம்பான அடாவடிச் செயலாகிறது.”

(4-12-1971 - தேதியிட்டு தினமனி தலையங்கம்)

தினமனி பத்திரிகை செய்தி நமக்கு புரிய வைப்பது கோவில் நுழைவு என்பது தலித்துக்களுக்கு மாத்திரம் பொருந்தாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

மதுரையிலுள்ள மோதிலால் நிலையம், வைசிய வாலிபர் சங்கம், நெல்மண்டி வாலிபர் சங்கம், லஜபதி நிலையம், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம், சுதந்திர தின ஞாபகார்த்த வாசக சாலை, யாதவ வாலிபர் சங்கம், வர்த்தகத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் சேவாஸ்ரமம், ஸ்ரீ மதிகள் சங்கம், அரிஜன சேவா சங்கம், செங்குந்த இளைஞர் சங்கம், நேரு வாசக சாலை, நித்தியானந்த நிலையம், பாரதி நிலையம், சித்த வைத்திய ஆராய்ச்சி சங்கம், சரஸ்வதி வாசக சாலை, ஜவாகர் வாசக சாலை, அரிஜன முன்னேற்ற வாலிபர் சங்கம், ஜான்சி ராணி வாசக சாலை, கமலா நேரு வாசகசாலை, விவேகானந்தா இளைஞர் சங்கம், தாகூர் வாசக சாலை, சிவ-ராவ் வாசகசாலை, பாரதி சேவா சமாஜம், பாரத மாதா வாசக சாலை, அன்சா, வாசக சாலை, அகம்படியர் வாலிபர் சங்கம், வேளாளர் அபிவிருத்தி சங்கம், பாபு கானு வாசக சாலை, நாயுடு வாலிபர் சங்கம்,இ இந்திய சுதந்திர வாலிபர் சங்கம், நாடார் ஊழியர் பிரசார சபை, தென்னிந்திய விஸ்வகர்மா சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், விஸ்வகர்மா கைத்தொழிலாளார்கள் சங்கம், சிதம்பரம்பிள்ளை வாசக சாலை, சலவைத் தொழிலாளர் சங்கம், விஸ்வகர்மா வாலிபர் சங்கம், விஸ்வகர்மா இளைஞர் சங்கம், மருத்துவர் சங்கம் - ஆகிய ஸ்தாபனங்கள் மற்றும் பல ஸ்தாபனங்கள் ஆதரவில் நேற்று மாலை ரிட்டையர்டு சப் ஜட்ஜ் ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணிய பந்துலு தலைமையில் திலகர் சதுக்க மைதானத்தில் நடைபெற்ற பெருத்ததோர் பொதுக்கூட்டத்தில்,

1. “மதுரை மாநகரிலுள்ள மேற்கண்ட சங்கங்களின் ஆதரவில் கூடியுள்ள மதுரை வாசிகளும் மற்றவர்களும் அடங்கிய இக்கூட்டம் சென்னை சட்ட சபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆலயப் பிரவேச சட்டம் வெற்றிகரமாகவும் அமைதியோடும் நடைபெற்று வருகிறதென்றும், அச்சட்டத்தை மாற்றவோ நிறுத்தி வைக்கவோ எவ்வித நியாயமோ, காரணமோ இல்லை என்ற சர்க்கார் உத்தரவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறதென்றும், அவ்வுத்திரவை ஸ்திரமாக நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தை சர்க்காருக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறது.

2. “இத்தடன் ஆலயப் பிரவேசச் சட்டத்தை அனுசரித்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலுள்ள கோயில்களையும், சகல இந்துக்களுக்கும் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக் கொள்கிறது.” எனும் தீர்மானங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடையே நிறைவேறின.

(நன்றி 4-3-1940 - தினமனி)

(ஆலயப் பிரவேசச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டமென்று பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவை அடிப்படையில் உண்மையற்றது. பிராமணரல்லாதோர் எழுச்சியின் பலனாக கிடைக்கப் பெற்றது. வரலாற்றினை தவறாக படிப்பவர்களைத் திருத்துவோம். பிராமண சிந்தனையினை அப்புறப்படுத்துவோம். இடையில் பிற்படுத்தப்பட்ட பிராமணர்கள் மற்றும் முன்னேறிய பிராமணரல்லாதோர் சாதிகளில் ஆரியர்கள் தோன்றாவண்ணம் சதுர்வர்ண நான்கு அடுக்கினையும் அப்புறப்படுத்துவோம்.)

தமிழகத்தில் நீதிக்கட்சி தோற்றுப் போன போனது அதில் தலைமையேற்ற சைவ வெள்ளாளர்கள் மற்றும் தங்களை உயர்சாதியினர் என்று கூறிக்கொள்ளும் பணக்கார சூத்திர சாதிகளின் மனநிலையில் இல்லாத நேமையினால் ஏற்பட்டது (சைவ வெள்ளாளர்கள் இன்று வரை தாங்கள் சூத்திரர் அல்ல என்றே வாதிடுகிறார்கள்).

முத்து மோகனின் வேதாக்கத்தின் கலாச்சார அரசியல் பக்கம் 31-ல் பதிவு பெற்ற விபரங்களே அத்தாட்சியாகும்.

வட்டார மேட்டுக்குடி பக்தி இரண்டும் கெட்டான் தன்மை கொண்டது. இது வைதீகத்தோடு இரட்டை உறவு கொண்டது. வைதீக மேலாதிக்கத்தை இது ஒரு புறம் எதிர்க்கும். இன்னொரு புறம் வைதீகம் முன்மொழியும் வர்ண வரிசையை வட்டார மக்களிடம் பரப்பும். வைதீகத்தை எதிர்க்கும் போது இது அடித்தள மக்களை ஆரத்தழுவும். உள்ளுக்குள்ளேயே தனது மேலாண்மையை நிறுவிக்கொள்ள அவர்களை தன்னிலிருந்து பிரித்துக் காட்டும். தமிழ் சூழல்களில் வட்டார மேட்டுக்குடிகள் தமிழ் மொழியோடும், தமிழ் நிலத்தோடும்,
தமிழ் பண்பாட்டு உணர்வோடும் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்னொரு புறம் ஆகமங்களோடு வேதங்களும் தமது புனித நூல்களே என்று அறிந்து கொண்டனர். வட இந்திய வைணவ சைவ புராணங்களை தமிழுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் இவர்கள் தயங்கியதில்லை.

இந்திய தேசமெங்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று வரையில் பின் தங்கியமக்களாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திறகுப் பின் சிறிதளவு முன்னேற்றப் பாதையில் பயணித்த போதும், பிராமணர்களுடன் ஒப்பிடும் போது நிலவுடமை கொண்ட முன்னேறிய சாதிகளுடன் ஒப்பிடும் போதும் பொருளாதார, கல்வி பலத்தில் பின்தங்கி வாடுகின்றனர். மத்திய அரசின் 27% இட ஒதுக்கீடு விசயத்தில் தற்சமயம் வெற்றி இலக்குடன் நெருங்கி வருகின்ற சமயத்தில் தாழ்த்தப்பட்ட, மலைசாதி மக்களுடன் சிநேகமான தோழமை உணர்வினை வளர்ப்பதோடு, பரஸ்பர புரிதலும், இருதரப்பினர்களுடன் வளர்வது ஒன்றே இன்றைய உடனடித் தேவையாகும்.

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முற்போக்கு இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காய் களமிறங்குவதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களைவிட தாழ்ந்த சாதியினர் கிடையாது என்ற உண்மையினை தமிழகத்து வீதிகளில் உரக்க முழங்க வேண்டிய நேரம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இன்றைய இந்திய சூழலில் பார்ப்பனியம் பிராமணர்கள் வடிவில் இருப்பதற்கு நிகராக சூத்தர சாதிகளுக்குள்ளும், ஆதிசூத்திர சாதிகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. ஆகவே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோபிசிக்கல் சங்கம், இராம கிருஷ்ண மிசன், வைதீக சங்கராச்சாரியர் மடம் போன்ற அரசியல் பீடங்களை பிராமணரல்லாதோர் குறிவைக்கும்போது அவர்கள் தன்னைத்தானே ஒவ்வொருவரும் சுத்திகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிராமண, சத்திரியன், வைசியன் ஆகிய மூவருமே ஆரியர்கள் என்ற நிதர்சன உண்மை கூட ஆரியரல்லாத மக்களிடம் (குறிப்பாக படித்த. பண்பாளர்களிடம்) செல்லவில்லை. மார்க்சிய மற்றும் திராவிட தேசிய இயக்கங்களில் படிப்பாளிகளிடம் கூட முழுமையாக போய் சென்றடையவில்லை. தமிழகத்திலுள்ள பிராமணரல்லாதவர்களிடம், வர்ண விளக்க கல்வியை கொண்டு செல்ல திராவிட மார்க்சிய இயக்கங்களே தயக்கம் காட்டுகின்றனர். பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் மட்டுமே இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தை தீவிரமாகப் பரப்பி பல இடங்களில் கொடிய தாக்குதலைத் தமிழ் சமூகத்தைச் சுத்திகரிப்பதற்காகத் தாங்கி நின்றார். சர்- சூத்திரன் என்று புளகாகிதம் அடைந்த பிராமணனுக்கு கடும் சொல்லில் பாடம் நடத்தினார். தந்தைப் பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்து கொண்டதைப் போல, தமிழகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சாதி நீக்கம் செய்ய விரும்பவில்லை அதற்கு பிரதானம், சதுர்வண நூலடுக்கினில் சூத்திரனுக்கு மேலாக படியேறிச் செல்ல இயலுமா? என்ற ஏக்கம் ஏனென்றால் பலமான மூன்று அடுக்கினை (பிராமண, சத்திரிய, வைசிய) கொண்டிருந்த பிராமணர்கள் இன்று வலுவிழந்து விட்டனர். ஆரியர்கள் தமிழ் சமூகத்தில் அப்புறப்படுத்தப்பட்டதனாலே அவர்களின் மூன்றடுக்கினை கைப்பற்றத் துடிப்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகத்தை சீரழித்த ஆரியர்களை விட கேடு கெட்டவர்களாக வரலாறு அவர்கள் முகத்தில் உமிழும்.

இந்து மதம் என்பது இந்திய தத்துவங்களை உள்வாங்கிய மதம் என்பதை புரிய நடராஜகுரு, யதி உரையாடல்கள் நமக்கு உணர்த்தும்.

ஒரு முறை குரு நித்ய சைதன்யயதியும், நடராஜ குருவும் காரில் சென்று கொண்டிருந்த போது யதி அவர்கள் பகவத் கீதை புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டு வந்தார். திடீரென்று நடராஜ குரு யதியின் கையிலிருந்த பகவத் கீதையினை பிடுங்கி எறிந்தார். புத்தகம் தெருவில் புழுதியில் விழுந்தது. மிகுந்த கோபமடைந்த யதி காரிலிருந்து இறங்கி வந்து புத்தகத்தை எடுத்தவர் ‘எதற்காக இப்படி மூர்க்கத்தனமாய் நடந்துகொள்கிறீர் என்று நடராஜ குருவினை கண்டித்தார். நடராஜ குருவோ எவ்வித பதட்டமுமின்றி பகவத் கீதையின் முகப்பில் ‘இந்துக்களின் நூல் என்ற வாசகத்தை காண்பித்தார். பகவத் கீதை இந்து மதத்தின் நூலா? அல்லது இந்தியத் தத்துவ நூலா? என்று கேட்க யதியின் கண்கள் அன்று திறந்தன. ரிக், யசூர், சாமம், அதர்வன அடங்கு முறை (வேதங்கள்) நூல்களுக்குப் பிறகு பிராமணங்கள், ஆரண்யங்கள் என்ற இருவகை இலக்கியங்கள் இயற்றப்பட்ட பின் இந்தியத் தத்துவ நூல்களாக அவைகள் உருப்பெறவில்லை. உபநிடத காலமே (அறிவு தத்துவம்) இந்திய தத்துவ மரபின் வீச்சான பருவம். ஆரியரல்லாத மக்களின் அறிவினை ஆரியர்கள் சிறப்பாக பயன்படுத்தினர். இயற்கை பற்றிய தேடலைக் கொண்ட சாங்கிய தத்துவத்தை வேதங்கள் உள்வாங்கியது. யோகாசனம், தியானம், மனப்பயிற்சிகளை உள்வாங்கியது. வேதங்களை சாடிய சார்வாகத்தை வேரறுத்தது. ஆசிவக மரபில் உதித்த சமணத்தை கழுவிலேற்றி சமணக் கூறுகளை சிறிதளவு உள் வாங்கிக் கொண்டது. பின் பிரம்மம் பற்றிய தேடல் கொண்ட உபநிடதங்கள் காலத்திற்கு ஏற்றார் போன்று மறுதலிக்கப்பட்டது. பல அது பல விளக்கங்களை சங்கரரின் அத்வைதமாகவும், ரமானுஜரின் விசிட்டாத்வைதமாகவும், மத்துவரின் துவைதமாகவம் விரிந்து, அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் வரையில் வளர்ச்சியைக் கண்டது. ஆகவே பகவத் கீதை ஒரு புறம் மாற்றங்களுக்கு உட்பட்டும், மற்றொருபுறம் “ஞானம் என்னும் நூலிலுள்ள மாலையிலுள்ள மணிகள்தான் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் என்று கிருஷ்ணனின் மாறாத வரிகளுக்குப் புறம்பாக குல தர்மங்கள் அழிவினைப் பற்றி ஆத்திரப்படுகிறது.

குல சஷயே ப்ரண ஸ்ரீ யந்தி குல
தர்மா ஸ நா த நா தர்மே நஷ்டே
குலம் கரு தஸ நமதா மோ பிப வத் யுத

நடராஜ குருவின் பார்வையில் பகவத்கீதை இந்திய தத்துவ நூல் பின் அது சவணர்களால் இந்து நூலாக்கப்பட்டது என்ற விபரம் யதியின் நெஞ்சில் ஆணியடித்தாற் போன்று பதிந்தது.

ஆகவே இந்துவாக வாழ்பவர்களுக்கு நான் குறிப்பிடுவது - இந்து மதத்தின் நான்கு அடுக்குகளை அப்புறப்படுத்துவோம். (ஐந்தாவது அடுக்கான ஆதிசூத்திரன் பொய்யானது - அவர்களின் இருப்பிடம் ஆரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது அடுக்கேயாகும்).

ஆனால் இன்றைக்கு இந்திய தேசமெங்கும் பரந்து கிடக்கும், சாதி என்னும் அடுக்கு - திருமண உறவு, வழிபாடு, கூட்டுறவு போன்ற குடும்ப உறவோடு தொடர்புடையது. ஆகவே சாதி நீக்கம் செய்பவர்களை வரவேற்போம். சாதியடுக்கினில் வாழ விரும்புகிறவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். பிற சாதிகளைத் துன்புறுத்தாமல் - பிற சாதிகளைத் தனது சூத்திர சாதியை விட கீழானவையென்று கருதுவதற்கு அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) எவ்வித ஆதாரமும், தார்மீக நியாயமும், விஞ்ஞானப்பூர்வ அறிவும் கிடையாது என்று நாளைய நமது குழந்தைகள் வளர்ந்த பின்பு நம் முகத்தில் காறி உமிழ்வார்கள்.

தமிழகத்து வீதிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழ் சிறுவர்களுக்கு தான் என்ன சாதி என்று தெரியாமல் விளையாடுகிறார்கள். அவர்களை சாதி மறந்து விளையாட விடுங்கள். அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு சாதி என்னும் சாக்கடையினை உணவாகத் தராதீர்.

அவர்கள் வளர்ந்த பின்னாவது இந்திய சாதிகளுக்கு ஒரு நீண்ட கல்லறையினைக் கட்டட்டும்... ஆரியர் மற்றும் அனைத்து பிராமணரல்லாத சாதிகள் நிம்மதியாக அந்தக் கல்லறையில் உறங்கட்டும்.

Friday, September 9, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-4

4. நாராயணகுருவின் வெற்றி


தமிழக பிராமணர்கள் தங்களது பிராமண மனத்தை பாதுகாப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்திடம் இறக்கி வைத்தபோது கேரளத்து பார்பனர்கள்… கேரள சாதிகளை ஒன்றினைத்து விட்டனர்… நெசவாளர்கள்.. என்ற பிரிவில் கேரளத்தில் முன்னேறிய சாதியை சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களும் அடங்கியிருந்தனர். குறிப்பாக நம்பூதிரிப் பெண்கள் கொடூர ஒடுக்குதலில் நெசவுத் தொழிலில் ஈடுப்டடிருந்தனர். ஒன்றுபட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வெள்ளாளர்களும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கேரள சாதிகளை பிரித்தாலும் சூழ்ச்சி அறியாத நம்பூதிரிகள் நாயர்களின் ஆதரவைச் சிறிய அளவில் பெற்றிருந்த போதும் பிள்ளை கட்டு - மற்றும் மதுவேட்கை போன்ற பிற்போக்குத் தனத்திலிருந்து நாயர் சமூகத்தை ஸ்ரீ நாராயண குரு விடுவித்தார் என்ற விபரம் .. முற்போக்கு நாயர் மனதினை நெருடியது… காலங்காலமாய் நாயர்களால் ஒடுக்கப்பட்ட ஒரு சாதியிலிருந்து உதித்தவர் தங்களை நேசித்ததை உணர துவங்கினர். தற்கொலைக்குச் சென்ற மேனன் செல்வந்தரைக் காப்பாற்றி கேரள மண்ணில் அவரைப் பெருந்தொழிலுக்கு சொந்தக்காரராக்கிய ஸ்ரீ நாராயண குருவை மேனன் சமூகத்தினர் அங்கீகர்த்தனர். தர்மதீர்த்தர் என்ற மேனன் சமூகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ நாராயண குருவின் சீடர் என்பதும் பின்னால் குருவை உலகரியச் செய்தவரும் அவரே. ஸ்ரீ நாராயண குருவின் ‘சாதி மறுப்பு’ கேரள மக்கள் மனங்களில் பதியம் செய்தது.

வைக்கம் வீதிகளில் நம்பூதிரிப் பெண்கள் அஇசி சமைக்க, நாயர் பெண்கள் இலையிட, ஈழுவப் பெண் காய்கறி வைக்க புலய சமூகம் அடுப்பூதி, பேரிகை சாதியினரும்.. கேரளத்து அனைத்து மக்களும் கரங்கோர்க்க .. 900 வருட பார்ப்பன மலை சடசடவென சரிந்தது, அரபிக்கடலில் விழ்ந்தது. வர்ணப் பிரச்சனை முடிந்த கேரளத்தில் வர்க்கச் சிந்தனை எழுந்தோடியது. இருந்த போதிலும் சிறியளவு சாதியம் இன்றும் மரிக்காது கேரள பூமியில் வசிக்கிறது என்றே பரிசீலிக்க வேண்டும்.

ஸ்ரீ நாராயண குருவால் துவக்கப்பட்ட கேரள மறுமலர்ச்சி தமிழகப் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரால் வைக்கம் பூமியில் முடித்து வைக்கப்பட்டது. குருவின் வாதம் எதிர் நிலை வாதம் கொண்ட போராட்ட வடிவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வாதம் வைக்கம் போராட்டத்துக்கு பொருந்தாது. ஏனெனில் குரு வைக்கம் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று வாதிடுவது தவறு வெள்ளூர் மடத்தை சத்தியாகிரகிகள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குரு அனுமதி தந்தார். சிவகிரியில் போராட்டத்திற்கு நிதி சேர்க்க ஒரு அமைப்பினை உருவாக்கினார்.

ஸ்ரீ நாராயண குருவால் துவக்கி வைக்கப்பட்ட இயக்கம் கேரள பூமியில் தந்தை பெரியாரால் முடித்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் தந்தை பெரியாரால் துவக்கி வைக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கம் ஸ்ரீ நாராயண குரு சிந்தனை கொண்டவர்களால் வரும் காலத்தில் முடித்து வைக்கப்படும். பெரியாரின் கடவுள் மறுப்பு - பின் தமிழர்களை மொழி, பண்பாடு, தேசிய இனம் வகையிலான எழுச்சிகரமான கல்வியாளர்களை உருவாக்கியது. கேரளத்தில் குருவின் சிந்தனைகளை குமாரன் ஆசான் இலக்கியமாக்கினார். தமிழகத்தில் தந்தைப் பெரியாரின் சிந்தனைகளை பாவேந்தன் பாரதிதாசன் இலக்கியமாக்கினார். தமிழகச் சூழலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அடையாளப்படுத்தப்படும் சாதிகள் சதுர்வணத்துக்கு மிக சவாலாக தங்களது பண்பாட்டினை பாதுகாத்தனர். கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர், நாடார், வன்னியர், கவுண்டர், நாயக்கர் சமூகங்களும், தாழ்த்தப்பட்ட சமூகங்களும், நாட்டார் தெய்வங்களை பார்ப்பன பெருந்தெய்வங்களுக்கு மாற்றாய் வழிபாட்டுப் போரினைக் காலங்காலமாகத் தொடர்ந்து வந்தனர். சதுர்வணத்தின் மூன்று அடுக்கினை (பிராமணன், சத்திரியன், வைசியன்) இந்திய அளவில் பிராமணர்கள் கைப்பற்றியபோதும், தமிழகத்தில் பிராமணரல்லாதோர் அரசாண்ட வரலாறு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆளப்பதிந்ததால், பிராமணரல்லாதோர் பண்பாட்டுத்தள ஒடுக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

கேரளச் சூழல் தமிழகச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழவர் பிற்படுத்தப்பட்ட சாதியாக கேரளத்தில் அடையாளப்படுத்தப்பட்ட போதும், கேரள தாழ்த்தப்பட்ட சாதிகளான புலயர், பரயர்(பேரிகை சாதியினர்), குறவர் சாதிகளை விட கடுமையான பண்பாட்டுத் தள தாக்குதலை தாங்கியவர்கள் ஈழவர்களே.. முதன் முதலில் ஈழவர்களே பார்ப்பனியம் விதித்த கோடுகளை அழித்தொழிக்க முற்பட்டனர். அதனாலேயே கொடூரமான படுகொலைகளை அச்சமூகம் சந்திக்க நேரிட்டது.

தமிழகத்தைவிட கிறிஸ்தவத்தின் தாக்கம் கேரளத்தின் முந்தைய வரலாற்றினை மாற்றி அமைத்தது.

1914-1917 கேரள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய பட்டியல்


சாதிகள் நாயர் ஈழவர் கிறிஸ்தவர் இஸ்லாமியர் புலையர் பறையர்
1914 70,712 23,895 84,161 4,883 2,017 1,097
1915 81,034 30,790 96,648 6,095 4,259 1,816
1916 94,336 39,224 1,13,020 8,569 8,494 2,652
1917 99,490 45,429 1,19,563 9,353 10,913 4,855

( நன்றி: நிர்மால்யாவின் கேரளத்தின் முதற்போராளி அய்யன்காளி நூலிலிருந்து)


நாயர், ஈழவர், புலையர், பறையர் சமூகங்கள் கிறிஸ்தவர்கள் என்னும் குறியீட்டினிலும் வருவார்கள். கேரள மக்களின் கல்வி தேவையினை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் துவைக்கி வைத்த போதும், ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலனம் கல்வி சாலைகள் துவங்கியபோது கேரள மக்களின் கல்வி தாகம் காட்டாற்று வெள்ளமென கேரள வீதிதோறும் கசடுகளை நீக்கத் துவங்கியது. ஸ்ரீ நாராயண குரு அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் செயல்பாடு பிரதிபலிக்கும் விளைவுகள் மீது அச்சம் கொண்டிருந்தார். தான் வாழ்ந்த காலத்தில் சிவகிரி மற்றும் தர்மபரிபாலன் பள்ளிகளிலும் சாதி ஒழிப்பினையே பிரதானமான முழக்கமாக முழங்கினார். ஈழவர்களுக்குக் கீழாக காலங்காலமாக பொருளாதாரப் பலமின்றி கிடந்த லட்சக்கணக்கான மக்களை கண்ட பின்பே, குருவின் சிந்தனை ஈழவரல்லாத மக்களுக்காக சிந்திக்கத் தூண்டியது. அன்றைய சிவகிரி மடத்தில் வளர்ந்து வந்த புலயர் பரயர் (பேரிகை சாதியினர்) மக்கள் வீடுகளுக்குச் சென்று அந்த பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளை சிவகிரி மடத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். குருவின் மீது நேசம் கொண்ட மக்கள் தங்கள் குழந்தைகளை குருவின் சாலைக்கு மனமுவந்து அனுப்பி வைத்தனர். பார்வைக்கு பிராமணர்களைப் போல காட்சி தந்த அக்குழந்தைகளே மகாத்மா முன்பாய் தெய்வீக சதகம் எனும் பாடலை இயற்றிப் பாடிய போது மகாத்மாவின் கண்கள் குளமாகியது.

தமிழகத்தில் நாத்திக விடுதலை கானம் முழங்கி தமிழ் சாதிகள் எழுச்சி பெற்றது. கேரளத்தில் குரு ஆத்மோபதேச சதகம். வெளியிட்ட போது அதன் அதிர்வுகள் சவணர்கள் தலையில் பேரிடியாக விழுந்தது. ஆன்மா - ஆன்மாவுக்கு போதிக்கும் கல்வியே ஆத்மோபதேச சதகம். உயிர்கள் கொல்லாமை அதன் உள்ளார்ந்த தத்துவம். குரு மருத்துவாமலையிலிருந்து ஞானம் பெற்று அருவிப்புர பிரதிஷ்டைக்கு முன்பாய் மீனவ மக்களுடன் வாழ்ந்த காலத்தில், பலமுறை மீனவ மக்கள் அன்புடன் தரும் மீனை புசித்து வந்தார். சவர்ணர்கள் குரு மீனை உண்ட நிகழ்ச்சியை, ஆத்மோபசதக வெற்றியினை அழித்தொழிக்க உபயோகப்படுத்தினர். மீனைப் புசித்த குரு.. சைவ சாமியாரா? இல்லை பரய சாமியாரா? என்று கருத்து போரினை கடுமையாகத் துவங்கினர்.

சவர்ணர்கள் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் மாமிசம் உண்ட நிகழ்ச்சியினை வைத்து விவேகானந்தரையே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர். விவேகானந்தரோ எனது ஆன்மிகம் எனது சிந்தனையில் உள்ளது உணவில் அல்ல என்று வெடித்து குமுறினார். (இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி முட்டை, மீன் இரண்டும் சைவமாக கருத வேண்டுமென்று அறைகூவுகிறது)

குரு சிவகிரி மடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விசேச, வேத கல்வியை துவக்கியதன் பின்னனியில் இந்த சைவ, அசைவ மோதல் உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை குரு காஞ்சிபுர சவர்ணர்களின் கோவிலுக்கு நுழைந்த போது குருவின் அருளால் கோவில் கதவு திறந்ததாக கருதுவது ஒரு வகையான சரடு ஆகும்.

தமிழகத்தைப் போல சைவ வேதாந்திகள் சாதி மேட்டிமை வாதம் குருவிடம் எடுபடாது. தாங்கள் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமென்ற அச்சத்திலே காஞ்சிபுரக் கதவு திறந்தது என்று திருத்திப் படிக்க வேண்டும். குருவின் காலத்தில் தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் அதிர் வேட்டுகளை முழங்கத் துவங்கிவிட்டது.

தர்ம பரிபாலனத்தில் குருவின் மறைவினையடுத்து சாதி மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. குறிப்பாக ஈழவர்களை தர்மபரிபாலனிலிருந்து வெளியேற்ற ஈழவரல்லாத மக்கள் முயற்சித்ததாக ஈழவர்கள் தரப்பு வெகுண்டெழ, யோகம் ஈழவ சாதி மேட்டிமை வாதத்தில் சீரழிவதாக ஈழவரல்லாதோர் வாதிட கேரளத்தில் N.S.S (நாயர் சர்வீஸ் சொசைட்டி), புலயர் மகாசபை மற்றும் பறையர் அமைப்பு என்று சாதிய வாதம் தலைதூக்கத் தொடங்கிய பின்பும் கேரள மக்கள் தங்களது சாதிய, வேற்றுமையினை கேரள எல்லைக்கு வெளியில் தெரியாதவாறு ஒரு முதிர்ந்த பக்குவ நிலையினை அடைந்து விட்டனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கே.ஆர்.நாராயணன் இந்திய ஜனாதிபதியாக பதவியில் அமர்வதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவரை ஜனாதிபதியாகப் பார்க்க மனமின்றி வானுக்கும், பூமிக்கும் குதித்த டெல்லி சவர்ணர்களை கேரள மக்கள் வீழ்த்தினர். நாங்கள் மலையாள சாதி என்று ஒத்த குரலில் கேரள மக்கள் எழுந்து நின்றபோது, இந்திய சவர்ணர்கள் தங்கள் வால்களை வெளியில் தெரியாது சுருட்டிக் கொண்டனர். இதுவரையில் இந்திய தேசத்தில் அமர்ந்த ஜனாதிபதிகளில் துணிவானவர் என்ற பெயருடன் பௌத்தம் அரசாண்ட போது அரசாண்ட சமூகம் என்பதை மறைந்த ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் நிரூபித்தார்.

ஸ்ரீ நாராயண குருவின் ஆன்மீக வழி புறந்தள்ளப்பட்ட சமூகத்தினை உயர் கலாச்சார புருஷர்களாக்குவது, சிறு துஷ்ட தெய்வங்களை விலக்கி பெருந்தெய்வ வழிபாடு, பிற்காலத்தில் அம்மக்களிடம் ஆன்ம பலத்தையும், புதிய உத்வேகத்தையும் ஊட்டியதுடன் தான் இழந்த பெருமையினை 1000 வருடங்களுக்கு பின்பு மீட்டுத் தந்தது. ஆகவே இரண்டு நிலைப்பாடுகளும் போற்றுதலுக்குரிய பாதைகளே.

திராவிட இயக்கம் பிராமண சாதியின் புனிதத்தன்மையினை வேரோடு பிடுங்கி எறிந்தது அதன் விஞ்ஞான கல்வி அணுகுமுறையினால் நிகழ்ந்தது.

இந்திய வைதீகத்தின் முதல் நூல்கள் ரிக், யசூர், சாமம், அதர்வனம் இவைகள் தத்துவ நூல்கள் அல்ல. அவைகள் சடங்குப்பாடல்கள் ஆகும்.

EMS வேதங்களில் நாடுவில் கூறியிருக்கும் ‘ நம்பூதிரிகள் ரிக், யசூர், சாம வேதிகள் என்ற பிரிக்கப்பட்டனர். ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது வேதங்கள் குருவிடமிருந்து நேரடியாக கேட்பதும், பாராயணம் செய்வதும் கட்டாயம். ஒரு பிரிவினராது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம்பாகமாக முழுவதும் பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டது போக தாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ குருமார்களோ அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிடுவார். “உண்மையில் வேத ஸ்லோகங்களில் நிறைந்திருப்பது ஏமாற்று வேலையே. இருந்த போதிலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது சத்திரியர்கள் என்று அறியப்படுகிற மன்னர் மானியம் பெற்ற மக்களின் மானியத்தை ஒழித்த போது, அதனை இடது சாரிகள் வரவேற்றனர். ஆதலால் இந்திய தேசத்தில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளை நிராகரிக்கக் கூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும். (சத்திரியர் என்று அறியப்படுகின்ற மக்கள் மன்னர் மானியம் பெற்றவர்களையே சுதந்திரத்திற்குப் பின் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் உழைக்கும் மக்களில் பலர் தங்களை சத்திரியர் குலம் என்று அடையாளப்படுத்துவது தமிழகத்தில் சமூக தத்துவார்த்த கல்வி மிகவும் பின் தங்கி உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.) ஈ.எம்.எஸ் - ன் கருத்திற்கு எதிராய் மார்க்சிஸ்ட் ஜீன் 2003 பக்கம் 37- ல் பதிவினை கவனிக்கவும் “வேதங்களின் உயரிய கருத்துக்களும், பண்டைய இந்து மற்றும் இந்திய சாத்திரங்களுமே பாரதத்திற்கு வழிகாட்டும் கோட்பாடுகள் என அறிவிக்கிற பி.ஜே.பி - யோடு கைகோர்ப்பதற்கு இந்த திராவிட கட்சிகள் தயங்குவதில்லை”. இடது சாரிகள் திராவிடக் கட்சிகளை தாக்குகின்ற போது - திராவிட கட்சிகளின் பி.ஜே.பி. ஆதரவினை வேத சாத்திரத்துடன் முடிச்சு போடுகின்றனர். அனால் இ.எம்.எஸ் - ன் ‘வேதங்களின் நாடு’ பற்றிய அதிகாரப்பூர்வ மறுப்பினை வெளியிடாது மார்க்சிய இயக்கம் ‘அது இ.எம்எஸ் - ன் தனிப்பட்ட படைப்பு என்று நழுவுகின்றனர். வர்க்கம் எப்படி இந்திய மண்ணில் பலமானதோ அதே போன்ற பலம் வர்ண பிரச்சனை என்பதை ஒத்து கொண்டால் மார்க்சிய தத்துவம் இந்திய சூழலுக்கு அன்னியமாகி விடும் என்று தேவையின்றி அச்சப்படுகின்றனர். இ.எம்.எஸ் -ன் படைப்பின் குறைபாடு மார்க்சியத்தின் குறைபாடு கிடையாது. அது இந்திய சமூகத்தின் குறைபாடு என்று ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். இதுவே இடதுசாரிகள் இந்திய சமூகத்தை புரியாது எதிர்பாதையினை தேர்ந்தெடுத்து பயணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி எழுச்சியானது பிராமணரல்லாதோர் இயக்க எழுச்சியே என்ற போதும் சட்டிக்குள் இருக்கும் சாதத்தை தம் மக்களுக்கு அதிகம் தர வேண்டும் என்பதே பா.ம.க வின் ஆரம்ப நிலையாக இருந்தது. உங்கள் வாக்கு வன்னியருக்கா? இல்லை அன்னியருக்கா? என்ற பிரச்சாரம் பிற்போக்கு பிரச்சாரமாக தமிழக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்டது. தற்போது பா.ம.க. அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கட்சியாக உருமாறப் போராடி வருகிறது. 27% இடஒதுக்கீடு விசயத்தில் மத்திய அரசில் அதன் தாக்கம் திராவிட இயக்கத்தைக் காட்டிலும் வேகத்தோடு ஈடுபடுத்திக் கொண்டது என்ற போதும், வன்னியர் அல்லாத மக்கள் பா.ம.க - வை அன்னியராகவே பார்க்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளின் எழுச்சி தலித் அரசியலின் சாதி நிராகரிப்புப் பாதையினை நோக்கி நகராது தடுமாறிக் கொண்டிருக்கிறது. தலித் - எதிர் தலித் அல்லாதோர் முரண்பாடு என்பது சாதிய நிராகரிப்பு தன்மை கொண்டது. அருந்ததியர் மொழி சிறுபான்மையினர் என்ற திருமாவளவன் விமர்சனமும், புதிய தமிழகத்தின் எழுச்சியின்மையும் தலித் பண்பாட்டு அரசியலில் நிரப்பப்படாத வெற்றிடமாகவே கிடக்கின்றது. இருந்த போதிலும் விடுதலை சிறுத்தைகளின் எழுச்சி பலமாக தமிழக வீதிகளில் எதிரொலித்து வருகிறது.

தமிழகத்தின் இடதுசாரிகளை பிராமணரல்லாதோர் இயக்கத்தில் அடைக்க இயலாது என்ற போதிலும், சாதிய ஒடுக்குதலுக்கு எதிராய் இடதுசாரிகள் களப்போராளிகளாக போரிட்டனர். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டாரச்சினேந்தல், நாட்டார்மங்கலம் உள்ளாட்சி தேர்தல், வாச்சாத்தி சம்பவம் தஞ்சை மண்ணின் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான இயக்கம் என்று தடம் பதித்திருந்த இடதுசாரிகள் சாதி பற்றிய விசாலமான புரிதலினால் தங்களது தளங்களை தலித் இயக்கங்களுக்கு பல பகுதிகளில் தாரை வார்த்து வருகின்றனர். மேல் சாதியில் பிறந்த இடது சாரித் தலைவர்கள் தலித் மக்களோடு இணைந்து போராடினர் என்ற இடது சாரிகளின் புளகாகித விமர்சன அணுகுமுறைகள் தலித் மக்களிடம் இடதுசாரிகள் மீதான வெறுப்பினை அதிகரித்தது. அரசியல் முதிர்ச்சி கொண்ட இடதுசாரியினர் சமூக முதிர்ச்சியின்மை என்ற நோயினால் தமிழகத்தில் தங்களது பலமான தளங்களைத் தக்க வைக்கவே தடுமாறி வருகின்றனர். இடது சாரி இயக்கத் தலைவர்கள் திராவிட, தேசிய இயக்கங்களுக்குப் பல்வேறு நுணுக்கங்களைப் பல காலகட்டத்தில் கற்றுத்தந்தனர். இடது சாரித் தலைவரிடம் பாடம் கற்றவர்கள் தங்களது பலத்தினை வலுப்படுத்திக் கொண்டனர். ஆனால் தமிழக இடது சாரித் தலைவர்கள், ஊழியர்கள் எவ்விதப் பாடத்தினையும் தமிழ் சமூகத்திடமிருந்து கற்றுத் தேறவில்லை. இயல்பாக இடது சாரிகளின் மனோபாவம் மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டுமென்றே விரும்புகின்றனர். தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தினைக் கற்க விரும்பாத மாணவனாகத் தேர்ச்சி பெறாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆரியர்கள் ஒரு வகை நாடோடிகளே! இந்திய சமூகத்தில் ஒரு 3000 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் நாடோடிகள் என்பதோடு அல்லாமல் அவர்கள் கலாச்சாரமற்ற சமூக மக்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கலாச்சாரம் பலமானது என்று விஞ்ஞானக் கல்வி உணர்த்தியது. 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் மாமிசம் உண்பர்களாகவும் சுராபானம் போன்ற மது வகைகள் உண்டு கீழான வாழ்க்கை வாழ்ந்தனர். இன்றைக்கு அவர்களால் சூத்திரர்கள் என்று முத்திரைக்குத்தப்பட்ட திராவிட மக்கள் பலமான கலாச்சாரமிக்கவர்களாக இருந்தனர். இத்தகைய சூழலிலே திராவிடர்களின் தூய அறிவை ஆரியர்கள் அபகரித்து, திராவிடர்களை கீழான நிலைக்குத் தள்ளினர். உபநிடதங்களுக்கு முந்தைய நூல்கள் அனைத்தும் சடங்கு நூல்களே... உபநிடத காலங்களே ஆரியர்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொண்ட காலம். ஆரியர்களின் அறிவு - திராவிடர்களுடன் பழகிய பின்பே என்று விஞ்ஞான கல்வி விளக்கியது. உபநிடதங்களை ஆரியர்கள் திராவிடர்களிடமிருந்து கைப்பற்றிய பின்பே ஆரியர்கள் வலு கூடியது. திராவிடர்களுடனான உறவுக்கு பின்பு திராவிட அறிவின் பலனை ஆரியர்கள் உணரத் தொடங்கினர். பின் பலமான திராவிடர்களுக்கு நிகரான கலாச்சார மிக்கவராய் ஆரியர்கள் உருமாறினர். பின் பிராமணன் (ஆரியன்), தாசன் (பிராமணரல்லாதோர்) என்ற இரண்டு சாதிகள் தோன்றி உருமாறினர். தாசனிலிருந்து 6,400 கிளை சாதிகள் உற்பத்தியாயின.

கேரளத்தில் ஸ்ரீ நாராயண குரு எடுத்த நிலைப்பாடு 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்களுக்கு கடன் தந்த நாம் ‘மீண்டும் சமஸ்கிருதத்தையும், உபநிடதங்களையும், வேதங்களையும் திரும்ப வட்டியுடன் பெறுவது போன்றதாகும். ஏனெனில் சமஸ்கிருதம் ஆரிய மொழியல்ல. அது திராவிடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொழியாகும். ஏனெனில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சமஸ்கிருத மொழியோடு வந்தவர்கள் என்ற வாதம் தவறாகும். ஆயுர்வேதம் கற்ற ஈழுவர்கள் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈழுவர்களிடம் சமஸ்கிருத அறிவு மற்றும் பாலி மொழி அறிவும் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் - செப்பேடுகள் இன்றும் உள்ளன. (ஸ்ரீ நாராயண குரு - மா.சுப்பிரமணியம்)

‘ நீ யாரப்பா எங்களது சிவனை தொடுவது’(பிரதிஷ்டை) என்ற ஆரியர்களின் கோபத்துக்குத் திராவிடரான ஸ்ரீ நாராயண குருவின் பதில் “நான் பிரதிஷ்டை செய்தது எங்களது திராவிட சிந்தனையைத்தான் என்று கூட புரிந்து கொள்ள இயலும்.. ஏனென்றால் ஸ்ரீ நாராயண குருவின் பார்வையில் “தூய அறிவே பிரம்மன்” என்பதாகும். உண்மையில் கடவுள் இந்த உலகை படைத்தார் என்றால் கடவுளை ஏற்றுக் கொள் என்பதாகும். உண்மையில் இயற்கைதான் இந்த உலகைப் படைத்தது என்றால் இயற்கையினை கடவுளாக மதி என்பதாகும்.

மூலவர் இல்லாது விளக்கு பிரதிஷ்டையும், முகம் காட்டும் கண்ணாடி பிரதிஷ்டையும் ஸ்ரீ நாராயண குரு கடவுளை தூய அறிவுள்ள மனிதர்களின் மனங்களிலே கண்டார். ஆகவே ஸ்ரீ நாராயண குருவை இன்று கடவுளாக வழிபடுபவர்களுக்கு நான் கூறுவது “அவர் கடவுளல்ல, கடவுளுக்கும் மேலான ஒரு மகத்தான மனிதர்” அவ்வாறு ஸ்ரீ நாராயண குருவை அழைப்பதுவே ‘கண்ணாடியைக் கோவிலின் மூலவராக பிரதிஷ்டை செய்த ஸ்ரீ நாராயண குருவுக்கு பொறுத்தமானதாகும். தந்தைப் பெரியாரின் இயக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை எழுச்சிப் பெற செய்தது. தந்தைப் பெரியாரின் கருத்துப்படி பெரியாரின் சிந்தனைகள் அடுத்தப் புள்ளியை நோக்கி நகரும் போது, அதனை அன்றைய சூழலுக்கு மறுவடிவம் தர வேண்டும் என்பதாகும். ஸ்ரீ நாராயண குருவின் சிந்தனைகளை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நவீனத்துவப் படுத்த வேண்டும்.

ஆகவே கேரளத்திலும், தமிழகத்திலும் மற்றும் இந்திய தேசமெங்கும் எழுந்த மின்னல்களை ஒரு புள்ளிக்குள் அடக்கினாலேயே, இந்திய சமூகத்தில் தற்போதைய அடுக்கு மறைந்து புதியதொரு இந்திய தேசத்தினை நோக்கி அப்புள்ளி நம்மை நகர்த்திச் செல்லும்.

ஏனென்றால் கேரள பூமியில் குருவின் இயக்கம் வெற்றியடைந்ததற்கு பிரதான காரணம், ஆரியர் வருகைக்கு முன்பாக வந்த ஈழவரிலிருந்து பிரிந்து சென்ற ஆரிய ஆதரவாளர்களே நாயர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கி.பி.9,10,11 ஆம் நூற்றாண்டு பதிவுகளில் கேரள சமூகம் பற்றிய புரிதல் வெற்றியடைய செய்தது. கேரள ஆய்வில் இன்றைய நம்பூதிரிகள் முழுவதும் ஆரியர்களல்ல என்றும் ஆரியர்களின் அடர்த்தியின்மையால், புத்த மத வீழ்ச்சியின் போது கோவில்களைக் கைப்பற்ற ஆரியரல்லாத மக்களைத் தன்னுடன் இணைத்து கொண்டாரென்று ஆய்வு கிட்டத்தட்ட உண்மையாகி விடுகிறது. ஏனென்றால் இந்திய நாடெங்கும் பிராமணர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் ஆரியர்கள், கேரளத்தில் நம்பூதிரிகளாக அறியப்படுவதுடன், நம்பூதிரிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் முழுக்க முழுக்க நம்பூதிரிகள் சுத்த ஆரியாஸ் என்று அடையாளப்படுத்த முடியவில்லை. மேலும் நாயர்களை சவர்ணராகப் பதவிப் பிரமாணம் செய்தது மற்றும் சூத்திரனான நாயர்களுடன் கைகோர்த்தது போன்ற விசயங்கள் நம்பூதிரிகள் தூய ஆரியர்கள் என்ற வாதத்தை தவிடு பொடியாக்கி விட்டது. ஏனென்றால் E.M.S ன் வேதங்களின் நாடுவில் “சில பிரிவுகளைச் சேர்ந்த நம்பூதிரிக் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் கூட ஒரு முறை குருவிடமிருந்து நேரில் கேட்டு பிராயாணம் செய்யலாமே தவிர சுயமாக வேதங்களை கற்றறியக் கூடாது என்று குறிப்பிடுகிறார். E.M.S -ன் கேரளம் - நேற்று இன்று நாளை நூலில் கேரளத்தை செதுக்கிய வர்ணங்களாக குறிப்பிடுவது ஈழுவர், ஆரியர் ஆகிய இரண்டு பிரிவினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இ.எம்.எஸ்- இன் மேலே கண்ட வாக்கு மூலம் கேரளத்து விஞ்ஞான ஆய்வுக் கல்வியின் வெற்றியை வேறு வழியின்று இ.எம்.எஸ் ஒத்துக்கொண்டார்.

மேலும் அதே நூலில் இ.எம்.எஸ். கூற்றுப்படி சிந்துக் கலாச்சரத்திற்கும், தென்னிந்தியாவின் திராவிடக் கலாச்சாரத்திற்கும் உள்ள மேன்மையை மிகைப்படுத்துவதோ, ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட வைதீக காலாச்சாரத்தின் மேன்மையை குறைத்துப் பார்ப்பதோ தவறானதென்று வாதிடுகிறார்.

இ.எம்.எஸ். அவர்களே சதுர்வணத்தின் துவக்கம் வைதீகக் கலாச்சாரமென்ற விசயத்தை மிக சுலபமாக மறைத்து விடுகிறார். புரட்சியாளர் இ.எம்.எஸ். ஏன்தான் இப்படி தடுமாறுகிறாரென்று புரியவில்லை. வைதீகக் கலாச்சாரம் 80% இந்திய மக்களை நாகரீகமற்றவர்கள், கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிய பின்பு ஏன் இந்திய உழைக்கும் மக்களை அரசர்களாக மாற்ற தியாகசீலர்களைக் கொண்ட மார்க்சியவாத கட்சிக்குள் இப்படியோரு கிருமிகர சிந்தனைகள் பரவியது, அவை இந்திய மார்க்சிய வாதிகளின் குறைபாடா? அல்லது இந்திய சமூகம் வர்க்கங்கள் அற்ற வர்ண சமூகமா! இ.எம்.எஸ்-ன் ஆன்மா விளக்கட்டும்.

இந்திய சமூகத்தில் மார்க்சியர்கள் பற்றிய மதிப்பீடுகளுக்கு வந்த பின்தான் நாம் அடுத்த புள்ளிக்கு செல்லமுடியும். முதலில் இந்தியாவில் வர்க்கம் மட்டும் உள்ளதா? அல்லது வர்ணப்பிரச்சனை உள்ளதா என்பதை மார்க்சியர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் மேற்கு வங்க உயர்சாதி பிராமண மார்க்சிய வாத அமைச்சர் தன்னை வெளிப்படையாக உயர்சாதி பிராமணன் என்றழைக்கிறார். அடிப்படையில் வங்காளிகள் பிராமணர்கள் அல்ல என்பது வேறு விசயம். இந்து மிதாகரா பள்ளி வங்காளிகளுக்கு பொருந்தாது. இந்திய சமூகத்தில் சாதி இல்லை என்ற வாதிடுபவர்கள் அநேகமாக சதுர்வணத்தில் 3 அடுக்குகளைக் கைப்பற்றிய பிராமணர்களாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் கால்கள் எறியும் தீயில் வேகவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பண்பாட்டுத்தள ஒடுக்குதலில் அவர்கள் பாதிப்படையவில்லை.

ஆனால் சூத்திரப் பிரபுக்கள் ஏன்தான் சாதி இந்த மண்ணில் இல்லை என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் புரிதல்படி “எத்தனை உற்சாகம் இந்த சூத்திரர்களுக்கு சூதர்களின் பாடலை மெய்மறந்து கேட்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள இயலும்.

Thursday, September 1, 2011

தேனி எம். சுப்பிரமணிக்கு விருது - வாழ்த்து!


தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் சார்பில் எஸ்.எஸ்.பொன்முடி எழுதிய “பசியின் நிறம் வெள்ளை” நூல் அறிமுக விழா மற்றும் கலை, இலக்கியத் தளங்களில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்களுக்கான பாராட்டு விழா போன்றவை கடந்த 29-08-2011 அன்று தேனி இண்டர்நேசனல் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும், நண்பருமான தேனி.எம்.சுப்பிரமணி இணைய இதழியல் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தமைக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இணைய இதழியல் துறையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய கலை - இலக்கிய சாதனையாளர் விருது, சி. பா. ஆதித்தனார் இதழியல் கழகம் வழங்கிய “தமிழ்த்திணை” விருது ஆகியவற்றின் வரிசையில் இந்த விருதும் சேர்ந்திருக்கிறது.

தேனி.எம்.சுப்பிரமணி மென்மேலும் பல சிறப்புகளைப் பெற நாத்து வழியாக வாழ்த்துகிறோம்.

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-3

3. வள்ளலார் ஒழிப்பும், தமிழ்ச் சாதிய எழுச்சியும்


தமிழக வரலாற்றில் பிராமணரல்லாத தமிழ் சாதிகளுக்கு எதிராக கொடூரமான பண்பாட்டுத் தாக்குதலை பிராமண இயக்கம் துவக்கி இருந்தது. முதல் குறி வள்ளலார். அவர்கள் பிரதானமாக குறிவைத்தது, இந்து வர்ணாஸ்ரமத்துக்கு சவால் விடும் தமிழ் சாதிகளைத்தான் 1911-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு கொடூர சட்டம் 1914-ல் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு தடா, பொடாவைப் போன்ற சட்டமென்றால் அதன் உள் நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்). தமிழகத்தில பார்ப்பனர்களுக்கு சவாலான கள்ளர், மறவர், ஒட்டர், வன்னியர், கவுண்டர், குறவர் இனங்களைக் குறி வைத்தது.

உசிலம்பட்டியை சுற்றியுள்ள பிரமலைக்கள்ளர்கள் தங்களுக்கென்று 8 கள்ள நாடுகளும் 24 உப கிராமங்களும் உள்ளடக்கிய இனக்குழு கலாச்சாரத்தை கொண்டிருந்தனர். வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். பிரமலைக் கள்ளர்களின் திருமண உறவு கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையது, ஒரே கோவிலைக் கும்பிடக்கூடிய மக்கள் பங்காளிகளாகவும், திருமண உறவுக்கென்று ஒரு குறிப்பிட்ட கோவிலை வழிபடுபவர்களை மாமன், மச்சினன் உறவு என்று தொன்மையான திருமண கலாச்சாரத்தை பாப்பாபட்டி, கருமாத்தூர், வாலாந்தூர், நாட்டார்மங்கலமென்று கோவில் வழிபாடு வளர்ந்து தும்மக்குண்டு வரைக்கும் நீள்கிறது. வரலாற்றில் தொன்மையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உடையவர்கள் கள்ளர்கள். விவசாயம் வளராத காலத்தில் வேட்டையாடுதலை தங்களது குலத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ‘வளரிதடி’ என்னும் வேட்டைக்கருவி இன்றும் காந்தி மியூசியத்தில் (அருங்காட்சியகத்தில்) காட்சிப் பொருளாக உள்ளது. 1871-ம் ஆண்டு மக்கள் குடிக் கணக்குப்படி விவசாய தொழிலாளர்கள் சாதிகளாக, கள்ளர், மறவர், படையாச்சி, பள்ளி, பள்ளர், நந்தமர், மூப்பர், உடையார், வன்னியர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கள்ளர்கள் சமூகம், வாழ்க்கையானது ஓர் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி (நாடு) கூற்றம் என்னும் பெரும் பிரிவையும் நாடு என்னும் சிறுபிரிவையும் உள்ளடக்கியதாகும். மதுரைக்குக் கிழக்கே நிர்வாகத் தலைமையின் அடிப்படையிலும் வழிபாட்டுரிமையின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டுள்ளன கள்ளர்களின் வாழ்விடங்கள் ‘நாடுகள்’ என்றழைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் சில ஊர்களே அடங்கியிருக்கும். தலைமைக் கிராமம் ஒன்றும் அதனைச் சார்ந்த் சில துணைக் கிராமங்களும் அடங்கியது ஒரு நாடாகும். நாடுகளின் தலைவர்களாகக் கள்ளர்கள் இருந்தனர். இந்த நாடுகளைச் சேர்ந்த கள்ளர்கள் நாட்டார்’ எனப்பட்டனர். சிவகங்கைக்குக் கிழக்கே 14 நாடுகள் இருந்தன. அவை குன்னங்கோட்டை நாடு, தென்னிலைநாடு, உஞ்சனை நாடு, இரவுசேரி நாடு, செம்பொன்மார் நாடு, கப்பலூர் நாடு, இரும்பா நாடு, சிலம்பா நாடு, வடம்போகி நாடு, தேர்போகிநாடு, கோபால நாடு, ஏழுகோட்டை நாடு, ஆற்றங்கரை நாடு, முத்து நாடு ஆகியவையாகும். இவற்றுள் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மார் நாடு ஆகியவை தேவக்கோட்டைக்கு அருகில் உள்ளன. (இரா. தேவ.ஆசீர்வாதம். மூவேந்தர் யார்?)

2-4-1920 அன்று மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கள்ளர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது, 17 கள்ளர்கள் மாண்டனர். கள்ளர்கள் மீது பட்ட குண்டினை இயக்கிய துப்பாக்கி வேண்டுமென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் துப்பாக்கிக்குள் இருந்த கருமருந்து இந்து வர்ணாசிரமத்துக்கு சொந்தமானது. வரலாற்றில் சவாலாக விளங்கிய ஒரு தமிழ் சாதிக்கு எதிரான கொடூர தாக்குதல் தான் “பெருங்காமநல்லூர் பயங்கரமென்றே உணர வேண்டும்.

மதுரையின் புகழ் பெற்ற வழக்கறிஞரான வெங்கட்ராம ஐயர் வன்முறையின் மூலம் கோவில் நுழைவில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்தும்படி தன் கட்சிக்காரரும் நெருங்கிய நண்பருமான முத்துராமலிங்கத் தேவரை அணுகினார். ஆனால் தேவர் அவருக்கு உதவவில்லை. ( தொ.பரமசிவம் - தெய்வங்களும், சமூக மரபுகளும் ப - 97)

அதன் காரணமாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரஸ் பார்ப்பன் ராஜாஜி காங்கிரஸ் என்று ஒதுக்கி தனது பார்வையை வங்க பூமியை நோக்கித் திருப்பினார்.

பிராமணர்களுக்கும், வங்காளிகளுக்கும் இடையே உள்ள வரலாற்று பகையினை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிக்கைச் செய்தியை பார்த்தாலே உணர்ந்து கொள்ள இயலும்.

“பிரிட்டிஷ் ராஜ்ஜியம்” ஓய்ந்து போனால் பெங்காளிகளா, மகராஷ்டிரர்களா, சீக்கியர்களா யார் ராஜ்ஜியத்தை ஏற்று நிர்வாகம் செய்வார்கள்?.

வங்க மண் இந்து வர்ணாஸ்ரத்தோடு நேரடி மோதலில் ஈடுபடவில்லை என்ற போதும் நீர்த்துப் போன சாதிய மேட்டிடைவாத பூமி என்றே உணரலாம்.

ஆகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த நிலைப்பாடு ஒரு புறம் வர்ண எழுச்சி மற்றொரு புறம் இந்திய சுதந்திர போர் ‘எட்கர் தர்ஸ்டன்’ எழுதிய Caste and Tribes of Southern India, ஆய்வின் வெளிப்பாடு கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் என்ற வரலாற்று வடிவ மாற்றம் இந்திய சமூக வரலாற்றில் துல்லியமான ஆய்வாகும். ஏனெனில் வரலாற்றில் தெலுங்கு மன்னர்களால் கள்ளர்கள் குறிவைக்கப்பட்ட போது, கள்ளரிலிருந்து மறவராக உருமாறுவது இயல்பானது. ஏனென்றால் மன்னர்களாலும், அரசினாலும் குறி வைக்கப்படும் மக்கள், ஒன்று அரசினை வீழ்த்திக் கைப்பற்ற வேண்டும் - இல்லையேல் அரசின் கொடிய அரக்க கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உருமாறி ஆக வேண்டும். கள்ளர்கள் மறவர்களாக- உருமாறிய துல்லிய பதிவுகள் கிடைக்காத போதும் - எட்கர் தர்ஸ்டனின் ஆய்வு கள்ளர் என்னும் புள்ளி மறவராக வெளிப்பட்டது என்பதை மறுக்க இயலாது. வரலாற்றில் கள்ளர் என்னும் புள்ளி மறவராக மாறிய பின்னும் கள்ளர், மறவர் கலாசாரத்திற்கு நேர் எதிரான கலாச்சார மக்கள் ஒரு புள்ளியாக எதிர் வருகின்ற போது கள்ளர், மறவர் என்னும் புள்ளியை இதர பகுதி மக்களுடன் தொடர்புப்படுத்த புதியதோர் சேர்க்கைப் புள்ளியாக பரிணமிப்பது ஒரு வகையான அறிவியல் பார்வையாகும். அந்தப் புள்ளியை அகமுடையாராக அறிய முடிகிறது. தமிழகத்தில் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்ற கள்ளர் மறவர், அகமுடையார் என பரவலான அங்கீகாரத்தை மூன்று தரப்பு மக்களிடம் பெற்றுள்ள போது, எட்வர்ட் தர்ஸ்டனின் நான்காவது புள்ளியான வெள்ளாளர், கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் புள்ளியை நோக்கிய நகராமை எட்கர் தர்ஸ்டனின் ஆய்வில் சிறியதோர் விடுபடுதலையும் - முக்குலத்து மக்கள் அல்லாத தமிழ் சாதிகள் நூற்றுக்கணக்காண புள்ளிகளாக பிரிந்து சென்றதற்கான ஆதாரங்களைப் பண்பாட்டுத் தளத்தில் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும்.

பசும்பொன் தேவரைப் போன்ற நிலைப்பாட்டினை எடுத்தவர் நெல்லை சீமையில் உதித்த நல் முத்தான வ.உ.சி அவர்கள்.

வ.உ.சி. பற்றிய ஈழ எழுத்தாளர் அ. கெளரி காந்தன் புகழாரமே வ.உ.சி யைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

“சனாதன இந்து” இந்திய தேசியத்துடனும், சைவத் தமிழ் வைதீகத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத, முற்போக்கு ஜனநாயக பகுத்தறிவுடனும் சீர்திருத்த மற்றும் தலமாற்றச் செல் நெறிகளுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ்த் தேசியத்தைப் புறந்தள்ளி வைக்காத உறுதி மிக்க இந்திய தேசியவாதியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்ட வ.உ.சி பற்றிய கெளரி காந்தனின் நிலைப்பாடு வ.உ.சி யின் நேர்மைக்குப் போதுமானது. வ.உ.சியைப் பொறுத்த வரையில் “எந்த ஒரு நூலாக இருந்தாலும் குற்றம் குறை இருக்குமென்றால் புறந்தள்ளத் தயங்கக் கூடாது. கடவுள் எழுதினார் என்ற நூலிலும், பிழை இருக்குமெனில் புறந்தள்ள தயங்கக் கூடாது. சைவத்திலும் அப்படியே, வைணவத்திலும் அப்படியே” என்றார். இன்று தமிழகத்தில் முளைத்திருக்கும் சிலர் வள்ளலாரை உயர் சாதி இடுக்கினிற்கான அவதாரப் புருசராய் நிறுவ இயலாது. வள்ளலாரின் ‘ஒரு சாதி’ கோசம் வேப்பங்காயாய்க் கசக்க சனாதன எதிர்ப்புப் போராளி வ.உ.சியை முன்னிறுத்தி தோல்வியடைந்து வருகின்றனர்.

கேரள பூமியில் தோன்றிய மின்னல்களைப் போல தமிழ்ச் சூழலுக்குத் தகுந்தவாறு இடியுடன் கூடிய மின்னல்கள் தமிழக வானில் மின்னத் தொடங்கியது. இத்தகைய சமூகப் பின்னனியுடன் தமிழகத்தில் திராவிட இயக்கம் எழுச்சி பெற்றது போல கேரள பூமியில் கேரள மக்களின் கல்வி, பண்பாடு, அரசியல் என்ற ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம் (SNDP) தனது பணியினைத் துவக்கியது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” அமைப்பின் சமரசமற்ற களப்போராளியான சகோதரன் ஐயப்பன் பின்னால் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புன்னப்புரா வயலார் எழுச்சி - கேரள மண்ணில் தன்னை இந்திய சுதந்திரப்போரில் ஆழமானப் பதிவினைப் பதிவு செய்தது.

தமிழகத்தின் வர்ண விடுதலை சுதந்திரத்திற்கு முன்பே துவக்கப்பட்டும் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

கேரளத்தில் சாதி, மத ஒடுக்குதல் அல்லாத சமூகம் உருவானதற்கு பிரதானமான 1924-ல் நடந்தேறிய வைக்கம் போராட்டமே அனைத்து கேரளத்து ஜாதிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்டியது. வைக்கம் போரினைப் போன்று தமிழகத்தில் தமிழ் சாதிகள் ஒன்றிணைத்த போராட்டம் நிகழவில்லை எனலாம். தமிழ் சாதிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே போராடி வெற்றியைப் பதிவு செய்தது. இன்றைக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் ஜாதிகள் பலமான ஜாதிகளாக உருமாறியுள்ளது ஆனால் இன்றைய பலமான.. பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த போதும் அவைகள் ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த போது இன்றைய தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக அடையாளப்படுத்தப்படும் சாதிகள் வேடிக்கையாளராக அமர்ந்திருந்தனர். அன்றைய காலமே இன்றைய தலித் சாதியினர் எழுச்சி பெற்றிருக்க முடியும்.

பேரிகை ஜாதியினரான இன்றைய விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் போராளிகளுக்கு உந்து சக்தியாக உள்ள இரட்டை மலை சீனிவாசனும், அயோத்தி தாச பண்டிதரும் (1845 -1914) கருத்தியல் மட்டத்திலும் கள மட்டத்திலும் வர்ண விடுதலைக்கான முழக்கத்தை தமிழகத்தில் முதலில் எழுப்பியவர்கள். இரட்டை மலை சீனிவாசன் தனது இதழில் 22-9-1894 பதிப்பில் ஐ.சி.எஸ். தேர்வுகளை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில் நடத்தும் யோசனையை எதிர்த்து 3412 பேரிகை சாதியினர் கையெழுத்திட்ட மனு ஒன்று தளபதி செகனி வழியாக நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்து அரசர்கள் ஆண்ட பொழுது அவர்கள் அரசியல் பிராமணர்கள் உயர்ந்த பதவிகளைப் பிடித்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியிலும் இந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்ற பிராமணர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாண்டு வந்தனர்.

பிராமணரல்லாதோர் உயர் பதவிகளைப் பெறுவதற்கான தகுதிகளை அடைவதற்கு முன்னதாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அந்த உயர்ந்த பதவிகளையெல்லாம் தங்கள் ஏகபோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் ஐ.சி.எஸ். தேர்வுகளை ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் நடத்த வேண்டுமென பிராமணர்கள் கிளர்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இரட்டைமலை சீனிவாசனுக்கு நிகரான அயோத்திதாச பண்டிதரின் சுதந்திரப் போராட்ட விமர்சனம்.

“இது வரையில் மதத் துறையில் ஆதிக்கம் வகித்தவர்கள் இனி மேல் அரசியல் துறையில் முந்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.”

இது தியோபிசிக்கல் சபை மண்டபத்தில் காங்கிரஸ் அமைப்பு சம்பந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்டிதரும் கலந்து கொண்டார். அக்கூட்டம் முடிந்த பின் அவர் ஆற்றிய உரையினை சுதந்திர இயக்கத்தில் பிராமணர்கள் தலைமையேற்றதின் நோக்கம் பற்றிய பதிவாகும்.

தமிழக வர்ண விடுதலைப்போரில் பேரிகை ஜாதியினர்கள் பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்டனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தலித் சாதிகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. பிராமண ஆதிக்கம் வீழ்ந்த பின்பு தமிழ் மண்ணில் பிற்படுத்தப்பட்டவன் பிராமணனாக தன்னைக் கருதத் தொடங்கினான். பிராமண எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொண்ட தலித் மக்களைப் புறந்தள்ளினர்.

கருத்தியல் மட்டத்தில் பேரிகை சாதியினர் (விடுதலை சிறுத்தைகள்) எழுச்சி பெற்ற போது, தேவேந்திர குல மக்கள் கிறிஸ்துவத்தின் உதவி கொண்ட பலமான கல்வி பெற்ற சமூகமாய் எழுந்தனர்.

ராமநாதபுர மண்ணில் உதித்த இம்மானுவேல் தேவேந்திரன், தேவேந்திர மக்களை எழுச்சி பெறச் செய்ய தனது உயிரைத் தியாகம் செய்தார். 33வயதில் தனது உயிரைத் தனது சமூக மக்கள் எழுச்சிக்காக அர்ப்பணித்த இம்மானுவேல் தேவேந்திரன் தமிழகத்து வானில் உதித்த துருவ நட்சத்திரம் என்பதை நேர்மையானவர்கள் ஏற்கனவே செய்வர்.

கேரள மண்ணில் சமூக இயக்கம் சீராக நடக்க வைக்கம் போராட்டம் கேரள மண்ணைத் தயார் செய்தது.

கேரள மண்ணில் பலமான அடர்த்தியான சமூகமாய் ஈழுவ சமூகம் கேரள வரலாற்றில் பட்டியக்கல்லாய் பங்களிப்பு செய்தனர். கேரளம் என்னும் பூமி கடலுக்கடியிலிருந்து சதகமலையாய் வெளியே வந்த போது ஈழ நாட்டினிலிருந்து தென்னைக் குருத்தோடு சதகமலையில் குடியேறியவர்களை ஈழ நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற புரிதலுடன் ஈழுவன் என்று அழைக்கப்பட்டனர். தென்னைக்கு மலையாளத்தில் கேரம் என்னும் பெயர் உண்டு.

பந்தளம் நாட்டில் பந்தளம் பணிக்கர் வகையறா என்று அழைப்பவர்கள் நிலக்கிழார்களாக வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாக “பாலி” மொழியில் பல செப்பேடுகள் ஆதாரமாய் கிடைத்தது. “குரு நித்ய சைதன்யயதி” போன்றவர்கள் பலமான ஈழுவ நிலப்பிரபு வகையாறாவை சேர்ந்தவர். மூக்கோத்து ஆசான் போன்ற ஈழுவ நிலப் பிரபுக்கள் பௌத்தம் அரசாண்டு வீழ்ந்த பின்பும் இந்து மத மேல் ஆதிக்கத்தின் பின்பும் பலமான நிலப்பிரபுக்களாய் வாழ்ந்தனர் என்பதற்கான அடையாளங்களே.

பௌத்த மதம் வீழ்ந்த போது பௌத்த கோவில்கள் இந்து கோவிலாக மாற்றப்பட்டு கோவிலுக்கான நிலங்களை ஆரியர்கள் - அரசர்கள் உதவியுடன் கைப்பற்றினர். சபரிமலை ஐயப்பனுக்கு சாஸ்தா என்று பெயருள்ளது. சாஸ்தா என்பது புத்தனின் பெயர் அதன் பின்பே பூர்வகுடிகள் கையிலிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்கள் பின்தங்கினார்கள் என்று உணர முடியும்.

கேரள மண்ணில் ஈழுவர்கள் கையிலிருந்த நிலங்கள் முழுமையாக பறிக்கப்படாமல் சிறிய நில உடைமை சமூகத்தினராய் வாழ்ந்தனர். ஸ்ரீ நாராயண குரு விவசாய குலத்தில் பிறந்தார். கால்நடைகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. குமாரன் ஆசான் போன்றவர்களிடம் நிலங்கள் இருந்தன.

ஸ்ரீ நாராயண குரு எழுச்சிக்குப் பின்பு சிறிய தொழில்களான கயிறு, ஓடு துவக்கப்பபட்டு 40% ஈழுவ மக்களின் குலத்தொழிலான கள் இறக்குவது நிறுத்தப்பட்டது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் தந்த கல்வி இயல்பாக ஈழுவர்களை பலம் கொண்டவர்களாக உருவாக்கிய போது கூடவே ஈழுவரல்லாத அனைத்து சாதியினர் கல்வி கற்றனர். தற்போது கேரளாவில் அனைத்து மக்களும் கல்வி கற்றுள்ளனர்.

பொருளாதார பலம் பெற்ற ஈழுவ சமூகம் முந்தைய சமூக ஒடுக்குதலை மறந்து உயர்சாதி பூனூல் அணியத் துவங்கினர். வைசியர் இல்லாத கேரளத்தில் ஓடு, கயிறு தொழில்களைக் கைப்பற்றிய ஈழுவர்கள் தங்களை உயர் ஜாதி எனக் கருதத் தொடங்கினர். வைக்கம் போராட்டம் ஈழுவர்களின் பூனூலை அறுத்தெறிந்தது. தமிழகத்துப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சாதிய மேட்டிமை வாதத்தை திராவிட இயக்கங்களும், தேசிய இயக்கங்களும் எதிர்த்த போதும் அவைகளைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டது. காரணம் பிற்படுத்தப்பட்ட தமிழ் சாதிகளின் பலம் மிருக பலமாகிவிட்டது.

தந்தை பெரியார் சாதியைத் துறந்தவர் என்பதும் திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு நேர்மையாக நடந்து கொண்டனர் என்பதன் பதிலே 69% பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு மற்றும் வெண்மணி சம்பவங்கள் போன்றவை.

வைக்கம் போராட்டம் என்பது கேரளத்தில் ஒரு புதிய சூழலை உருவாக்கியது. பொருளாதார பலம் பெற்ற ஈழுவன் இனி எவராலும் ஒடுக்க இயலாது என்ற கனவு நொறுங்கிப்போனது.

மாதவன் வழக்கறிஞர் தடுத்து நிறுத்தப்பட்ட போது தங்களைப் பணிக்கர் என்று இறுமாப்படைந்தவர்கள் இதயத்தில் ஓட்டை விழுந்தது.

கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் ஈழுவர், நெசவாளர்கள், ஆசாரி, வன்னியர், பஞசமர்கள் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானது. (Selected essays - P 9 Mahendra P.Bhatia)

Saturday, August 27, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-2

2. சாதிய மறுப்பில் பெரியார்., காந்தி...


“தமிழ் மொழி பற்றி, அதன் கலாச்சாரம், வரலாறு பற்றி ஒரு பகுத்தறிவான, சமநிலையான அணுகுமுறையை நாங்கள் உருவாக்க வேண்டியது அவசியம். தமிழ் ஒரு தென்னாசிய மொழி. தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் சேர்ந்துதான் ஒரு தென்னாசியக் கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கின்றன. தமிழின் தொன்மை குறித்து வெறித்தனமாக பாராட்டுவதோ அல்லது சமஸ்கிருதத்தின் மரபு பற்றி எதிராக எண்ணுவதோ தவறு. உலகத்து மொழிகள் அனைத்தையும் போல, கலாச்சாரங்கள் போலத் தமிழும் ஆதியிலிருந்து வேற்று சக்திகளால் மாற்றமடைந்து வந்திருக்கிறது. தமிழ் தன் தனித்தன்மையையும் பண்பையும் வீரியத்தையும் 2000 வருடங்களாகக் காப்பாற்றியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அது பலவித கலாச்சாரங்களுடன், மரபுகளுடன், சமயங்களுடன் கொடுத்தும், வாங்கியுமிருக்கிறது. இதுதான் அதன் பலம். இதை மனதில் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் சமஸ்கிருதத்தின் மேன்மையையும் மதிப்பையும் உணர வேண்டுவது முக்கியம். சமஸ்கிருதம் பல்லாயிரம் வருடங்களாகப் புலவர்களின் மொழியாகத் தென்னாசியாவில் இருந்ததோடு இந்து, புத்த, ஜைன மதங்களின் மொழியாகவும் இருந்திருக்கிறது.” (தமிழாசிரியர் ஜார்ஜ் எல்கார்ட், காலச்சுவடு அக்டோபர் 2005 பக்கம் - 52)

தந்தைப் பெரியார், சூத்திரர் - தலித் ஒற்றுமைக்கு முயற்சித்தார். ஆனால் அது நடக்கவேயில்லை. உண்மையில் மண்டல் கமிஷன் அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தலித் பிரிவினருக்கும், இதர பிற்ப்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடு எழக்கூடிய கடைசி இடமாகத் தான் தமிழகம் இருக்குமென அவ்வறிக்கை கூறியது. (ஆதாரம் - சித்தாந்தமற்ற அரசியல் அதுவே தமிழகத்தின் துயரம் - ஈழப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி (மார்க்சிஸ்ட் ஜீன் 2003, பக்கம் - 43))

திராவிட இயக்கத்தின் பாதையை நாம் திரும்பிப் பார்த்தோமெனில் பிராமணரல்லாத பல சாதிகள் ஒருங்கு சேர்ந்த ஓர் புதிய “வர்க்கம்” அன்றைய சென்னை மகாணத்தில் உருவான மிக முக்கியமான முதன்மையான நிகழ்வினைக் காண இயலும். பிள்ளைமார்கள், நாயர்கள், கம்மா, காப்பு ரெட்டியார்கள் உள்ளிட்ட கூட்டணியாகும். (கார்த்திகேசு சிவதம்பி நேர்காணல் - மார்க்சிஸ்ட் ஜீன் 2003 பக்கம் 39)

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்ற வாதம் தமிழில் மனோன்மணீயம் நூலினை எழுதிய சுந்தரனார் தம்முடைய பாடலொன்றில் வடமொழியான சமஸ்கிருதத்தை பற்றிக் குறிப்பிடும் போது “ஆரியம்” என்று குறிப்பிடுவதைப் பிடித்து தொங்குகிறார்கள். திராவிட நாகரீகத்தை சேர, சோழ, பாண்டியரோடு முடித்து விடுகின்றனர். கரப்பா, மொகஞ்சதாரோ வடநாட்டில் உள்ளதைச் சுலபமாக மறைத்து விடுகின்றனர். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சிறிய கலாச்சாரமானவர்கள் என்பது அவர்களின் தொழிலே சாட்சியாகும். (ஆதாரம் - காலச்சுவடு, அக்டோபர் 2005 - பக்கம் 52) (அழுத்தம் என்னுடையது)

கேரளச் சூழல், தமிழகச் சூழலிலிருந்து மிகுந்த வித்தியாசம் கொண்டது. ஏனெனில் தமிழகத்தின் சமூக விடுதலை இயக்கம் பலம் வாய்ந்த தமிழக சூத்திரர்களான சைவ வெள்ளாளார், செட்டியார் உள்ளிட்ட சாதிகளால் துவங்கி வைக்கப்பட்ட பின் தந்தை பெரியாரின் எழுச்சியே அதனை முன்னெடுத்துச் சென்றது. சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும், தமிழகத்தின் முந்தைய சூழ்நிலையிலிருந்து (ஆத்திக (சைவ + வைணவ) புதியதொரு (நாத்திக) சூழலுக்கு நகர்த்திச் சென்றது. கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு பேரிகையாக எதிரொலித்தது. தந்தை பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்துகொண்டவர். ராமசாமி நாயக்கர் என்று அழைத்த போது நீதிமன்றத்தின் வாசலில் நின்றிருந்தவர் நீதி மன்றத்துக்குள் செல்லவில்லை. தனது பெயரை ராமசாமி என்றே அழைக்க வேண்டுமென்று அழைத்தவர்களைத் திருத்தினார்.

கேரளச் சூழல் தமிழகத்துக்கு முற்றிலும் வேறானது. கேரளத்தில் அவர்ணர்களில் முதலானவர் ஈழுவர் என்ற போதும் தமிழகத்து அவர்ணர்களின் முதலாமானவரான சைவ வெள்ளாளரைப் போன்று பொருளாதார பலம், கல்வி அறிவு பெற்றவர்கள் கிடையாது. பந்தளம் பணிக்கர் மூர்கோத்து ஆசான் மற்றும் ஆயுர்வேதம் பயின்ற ஈழுவர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படைவீரர்களாகப் பணி செய்த ஈழுவர்களே கல்வியறிவு பெற்றிருந்தனர். (ஸ்ரீ நாராயண குரு - மா. சுப்பிரமணியம்) தமிகத்தில் பரவலான கல்வி சாலைகளில் பிராமணர்கள் கல்வி கற்ற போதும், பிராமணரல்லாதோர் சிறிதேனும் கல்வி கற்க வாய்ப்பிருந்தது. கேரளத்துச் சூழல் வேத சாலைகளும் கிறிஸ்துவ மிஷினரிகளுமே ஆதிக்கம் பெற்றிருந்த காலம். கேரளத்து மக்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்க கடுமையான தடை இருந்தது. நாயர்கள் ஈழுவர்களை ஒடுக்க, ஈழுவர்கள் புலயர்களை ஒடுக்க, புலயர்களுக்கு கீழாக நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்கள் சாதியினர் இருந்தனர். அடர்த்தியான ஈழுவர் சமூகம் தீயர், சோவாஸ், பணிக்கர், முதலியார் என்று (திருவிதாங்கூர் , மலபார் , கொச்சி) பிரிந்து கிடந்ததோடு ஒருவருக்கொருவர் படி அடுக்குகளைத் தங்களுக்குள் கற்பித்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படை வீரர்களான ஈழவர்களுக்கு ‘முதலியார்’ பட்டத்தைக் கேரளத்து சவர்ணம் வழங்கியது. முதலியார் பட்டம் பெற்ற ஈழுவன் திருவிதாங்கூர் அரசனிடம் மனு செய்தான். இதர ஈழுவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று அறிவித்துப் பட்டயம் வழங்க கோரிக்கை வைத்தனர். (ஈழுவன்-சுப்பிரமணிய அய்யர் வருடம் 1906.) சுவாமி விவேகானந்தரின் சொல்படி “அன்றைய கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி” என்றே புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த வெற்றி பிராமணரல்லாதோர் எழுச்சியை உருவாக்கியது. பிராமண ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இராஜாஜி பதவி இழந்த போது ஆச்சாரியாருக்கு சல்யூட் அடித்த கை மாற்றானுக்கு சல்யூட் அடிக்காது என்று பார்ப்பன உயர் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தான். பிராமணர் ஆதிக்கம் பக்குவமாக திராவிட இயக்கங்களால் அப்புறப்படுத்தப்பட்டது. கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் 1888-ல் அருவிப்புரத்தில் ஸ்ரீ நாராயண குரு துவக்கிய ‘சிவலிங்க பிரதிஷ்டையே கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் பதியம் போட்ட முதல் பட்டியக் கல்லாகும். பார்ப்பனியத்தின் மீது விழுந்த பெருந்தாக்குதலென்றே வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். மற்றொரு மதிப்பீடு 3000 ஆண்டுகளாக பிழையாக வேதம் கற்பித்தவர்களுக்கு முறையாக வேதம் கற்றுத்தந்த நாளே அருவிப்புர பிரதிஷ்டை என்கிறது ரிக், யஜீர், சாமம், அதர்வனம் நாடோடிகளின் சடங்குப் பாடல்கள். (ஆதாரம் முத்து மோகனின் வேதாந்தத்தின் கலாச்சார அரசியல்).

கேரள பூமியில் ஸ்ரீ நாராயண குரு எடுத்த நிலைப்பாடு அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, எதிர் நிலை எடுக்காது அனைவரையும் நேசிப்பது... குறிப்பாக உயர் சாதியினர் என்று அறியக்கூடிய மேட்டுக்குடி பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சுவீகரிப்பது. மோதல் போக்கினை தவிர்த்து ஆக்கப்பூர்வமாய்ச் சிதைந்து போன பாதைகளை செப்பனிடுவது என்றே பயணித்தார். கேரளத்து ஈழுவருக்கும் சவணர்களுக்குமிடையே மோதல் போக்கு கலவரமாக நிகழவில்லை. அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டு தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்ளும் கொள்கை.

வேதங்கள், உபநிடதங்கள், பிரம்மசூத்திரங்கள், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிராமணர்களின் அனைத்து அறிவினையும் அபகரித்ததோடு, பின்தங்கிய மக்களின் பிந்தைய கலாச்சாரங்களை விட்டொழித்து ஒவ்வொருவரும் உயர்ந்த கலாச்சாரம் கொண்டவராக உருமாற அறை கூவினார். கள் இறக்கும் தொழிலைக் கைவிட்டு கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள அறைகூவினார். உடல் தூய்மையினையும், கல்வியுமே பிரதானம் என்று வாழ்விழந்த மக்களை அறை கூவி அழைத்தார். குரு, கள் இறக்கும் தொழிலைக் கைவிட ஈழுவர்களுக்குக் கற்றுத் தந்த கைராட்டை மகாத்மா கண்களில் பட்டபின் மகாத்மாவின் சிந்தனையில் ‘ராட்டை’ ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருவியானது.

ஸ்ரீ நாராயணகுருவின் அருவிப்புர பிரதிஷ்டை சாதாரண நிகழ்ச்சியன்று. தமிழகத்தின் வள்ளலாருக்கு நேர்ந்தது போன்ற படு பாதக கொலை ஸ்ரீ நாராயணகுருவுக்கு ஏற்படவில்லை. தமிழகத்து பிராமணர்களை விட கேரளத்து பிராமணர்கள் நேர்மையாக நடந்து கொண்டனர். தமிழகத்து பிராமணர்களின் வலுவினைப் போன்று கேரளத்து நம்பூதிரிகள் விளங்கவில்லை. கேரளத்து நமபூதிரிகளின் பலம் கேரளத்து சூத்திரர்களான நாயர்களுடன் கைகோர்த்ததனால் ஏற்பட்ட பலமே. ஸ்ரீ நாராயண குருவின் சிவப்பிரதிஷ்டை பிராமணர்களின் வேதாகம விதிப்படி நடந்தது. சவர்ணரான தங்களைக் கருவறை நுழைய விடாது தடுத்த நம்பூதிரிகளுக்கு அவர்ணர்களான ஈழுவரால் பதிலடி கிடைத்தது சரியென்றே அவர்கள் கருதினர். தங்களால் செய்ய இயலாததை ஈழுவர் செய்ததால் அருவிப்புர சிவபிரதிஷ்டை மீது நாயர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பூதிரிகள் வாங்கித் தந்த கள்ளினை உண்ட சில ஈழுவர்களே அன்று எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற போதும் ஸ்ரீ நாராயணகுருவின் பின்னால் திரண்டிருந்த சீடர்களும், பொதுமக்கள் ‘சிவபிரதிஷ்டையினை’ பாதுகாத்தனர் (குறிப்பு:-ஸ்ரீ நாராயணகுரு சிவபிரதிஷ்டையினை மன்னன் கேள்விப்பட்டு குருவை அரண்மனைக்கு அழைத்து பிரம்பால் அடித்த போது பிரம்பு அந்தரத்தில் நின்றதாக கூறுவது ஒரு கட்டுக் கதையாகும். குருவைப்பற்றி நூற்றக்கணக்காண கட்டுக்கதைகள் அன்றே பரப்பப்பட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறது. நான் கடவுளல்ல என்று குரு திரும்ப திரும்ப உரக்கக் கூறினார்)

கேரள பூமியில் ஸ்ரீ நாராயணகுருவைப் பொறுத்த மட்டில் சாதி நிராகரிப்புப் பாதையே குருவின் பாதையாகும். அருவிப்புர சிவப்பிரதிஷ்டைக்குக் கிடைத்த வரவேற்பும், ஒட்டு மொத்த கேரளமெங்கும் உழைக்கும் மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பும் கேரளமெங்கும் புதிய கோவில்களை நிர்மாணிக்கக் குருவினைத் தூண்டியது. அருவிப்புர கோவிலோடு குரு நிர்மாணித்த சபை கேரள பூமியெங்கும் தீவிரமாகச் செயல்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் என பலவாக, அரசியலாகப் பிளவுபட்டிருந்த கேரள மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவை ஒன்று சேர்ந்தது.

குருவுக்கு பக்க பலமாக கேரளத்து பாரதியார் குமாரன் ஆசானும், நடராஜ குருவின் தகப்பனார் பல்ப்புவும் ஆலமரமாக குருவைப் பாதுகாக்க, கேரளத்து வீதிகளைச் சுலபமாக குரு செப்பனிட்டு சென்றார். கேரள சூழல் தமிழகச் சூழலைப் போன்று ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் சில மோதல்கள் எழுந்தது. குரு நிர்மாணித்த தலைச்சேரியில் ஈழுவர்களுக்குக் கீழாக வாழ்ந்த அப்பாவி மக்களை ஈழுவர்கள் கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை. ஈழுவர்களில் பெரும்பகுதி மக்கள் சனாதன ஈழுவர்களுடன் தொடர்ந்து மோதி வந்தனர். ஸ்ரீ நாராயண குரு சூழ்நிலைகளைக் கவனித்து வந்தார். திரைப்பட நட்சத்திரங்களின் ஆக்ரோஷ செயல்பாடு போன்ற செயல்பாடல்ல குருவின் செயல்பாடு. உணர்ச்சிகளுக்கு இரையாகாது அறிவுக்கே வேலை தந்தார். கோவில்களுக்குப் பதில் கல்விச்சாலைகள் மனிதர்களின் மனதினைப் பக்குவப்படுத்தும் என்ற சிந்தனைக்கு வந்து இருந்தார்.

புரட்சியாளர் ஐயப்பன், என்ற சகோதரன் ஐயப்பன் கேரளத்து ஈழுவர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார். சனாதன ஈழுவர்கள் அவரை புலையன் ஐயப்பன் என்று வசைமொழி பாடினர். அவரால் ஈழுவ சாதிக்குத் தீட்டு என்று ‘சாதி தீட்டு’ செய்தனர். ஈழுவ மக்களுக்கு சனாதான ஈழுவர்கள் அறைகூவினர். “சகோதரன் ஐயப்பனுக்கு பெண் தரும் ஈழுவர்கள் சாதி தீட்டுக்கு உள்ளாவார்கள் என்ற மிரட்டல் செய்தியை அனுப்பினர். சனாதான ஈழுவர்களின் மிரட்டல் புரட்சியாளர் ஐயப்பனின் பாதையினை தடுக்க இயலாது போனது. சகோதரன் ஐயப்பன் பின்னால் முற்போக்கு புரட்சிகர சிந்தனை கொண்ட ஈழுவர்கள் அணிவகுத்தனர். ஒருபுறம் குருவின் கேரள அமைதி யாத்திரையும் மற்றொரு புறம் புதியதாய் உருவான ஈழுவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிரச்சாரமும் சகோதரன் ஐயப்பனின் புரட்சிகரப் பயணமும் சனாதன ஈழுவர்களை கேரள வீதிகளிலிருந்து அப்புறப்படுத்தியது. (இடது சாரிகளே கேரளத்தை செப்பனிட்டார்கள் என்று வாதிடுபவர்கள் ஒரு விசயத்தை மறந்து விடுகின்றனர். இடது சாரி சிந்தனையை கேரள வீதியில உலவ விட்டவன் புரட்சியாளர் சகோதரன் ஐயப்பன் என்பதை சுலபமாக மறந்து விடுகின்றனர்” தோழர் பிரகாஷ் காரத்” உள்பட.) கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் ஆண்ட சாதிகளான நம்பூதிரிகள், நாயர்களை விட மிகுந்த நெருக்குதலை தந்தவர்கள் ஈழுவர்களே.

ஸ்ரீ நாராயண குரு ஈழுவ சமூகத்தினர் ஒற்றுமை பற்றி கேட்ட போது அவர்கள் கடல்புரத்து மண் என்றே கடுமையாக சாடினார். ஏனெனில் கடல்புரத்து மண் ஒன்றொடொன்று இணையாது உபயோகமில்லாதது என்றே பொருள். ஈழவர்களுக்கு எதிராக ஸ்ரீ நாராயண குரு கடுமையான வார்த்தைகளை பல முறை உபயோகித்த வார்த்தைகள் பதிவுகள் வாயிலாக தெரிவது “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு முந்தைய ஈழுவன் சமூகம், “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்துக்கு பிந்தைய ஈழுவன் சமூகம் என்றே பகுத்துப் பார்க்க வேண்டும். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகம் துவங்குவதற்கு முன் கேரளம் முழுக்க பட்டம் பெற்ற ஈழுவர்களை கணக்கெடுத்தால் விரல்விட்டு எண்ணி விட இயலும். ஆனால் இன்றைய கேரளத்தில் பட்டம் படிக்காத ஈழுவ குடும்பங்கள் அநேகமாக எங்கோ ஒன்று அரிதாகக் கிடைக்கும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீ நாராயண குருவை வெளிப்படையாக புரிந்து கொள்ள நினைப்பவர்கள் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் கேரள சமூகத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்டாலே ஸ்ரீ நாராயணகுருவை புரிந்துகொள்ள இயலும். ஏனென்றால் கேரள பூமியில் இன்று ஈழுவனை விட பொருளாதார மற்றும் பண்பாட்டு தளத்தில் சற்று பின்தங்கிய சாதிகளெல்லாம் கேரள பூமியில் ஒடுக்கப்படவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பேரிகை சாதியினர் (தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளாக அறியப்படுபவர்கள்) கேரள பூமியில் ஒடுக்கப்படாத சாதியென்றே புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலாக கேரளத்தில் ஒடுக்கப்பட்ட தலித் ஜாதியினர் புலயன் என்றே அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் புலயர் சமூகத்தில் பிறந்த அய்யங்காளி (1863-1948) அவர்களே புலயர் சமூகத்தை தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற அறைகூவல் விடுத்த போராளி ஆவார். எழுதப் படிக்க தெரியாத புரட்சியாளர் அய்யங்காளி அவர்கள் ஒரு பெரும் பட்டாளத்தையே எழுதப் படிக்க தூண்டியுள்ளார். சமரசமற்ற இந்தப் போராளியின் பிறப்பினாலே புலயர் சமூகம் இன்றைய கேரளத்தில் பலமான வர்ணமாக, வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டுமென்றால் தற்போதைய கேரளத்தில் புலயர்களின் பலம் முன்னேறிய சாதிகளின் பலத்தினை போன்றதென்றே புரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர் கல்வி, வேலைவாய்ப்புகளில் புலையர்களின் ஆதிக்கமே கேரளத்தில் அதிகம் ஆகும். புலயர் சமூகத்தின் எழுச்சிக்கு அய்யங்காளி ஒரு புறம் என்றாலும் மற்றொரு புறம் ஸ்ரீ நாராயண குரு என்றே கூறவேண்டும். கேரளத்தில் சவர்ணர்கள் (எதிர்) அவர்ணர்கள் போராட்டம் தீவிரமடைந்த போது ஸ்ரீ நாராயணகுருவைச் சந்தித்த ஈழுவ சமூக இளைஞர்கள் ஈழுவர்களை ஒடுக்குகின்ற நம்பூதிரிகள், நாயர்களை பலி வாங்க வேண்டுமென்றனர். அப்போது ஸ்ரீ நாராயண குரு அந்த இளைஞர்களிடம் கூறியது “முதலில் நீங்கள் புலயர்களை ஒடுக்காமல் இருங்கள்” என்றே கூறினார்.

கேரள பூமியில் ஈழுவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகமாய் அடையாளப்படுத்தப்பட்ட போதும், கடுமையான தாக்குதலை சந்தித்த சமூகம். “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொச்சியில் நடந்த போது சனாதன நாயர்களின் கடுமையான தாக்குதல் ஈழுவர்கள் மீது நிகழ்ந்தது. “ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலனம்” யோக எழுச்சிக்கு பின் ஈழுவர்கள் பலம் பெற்றதை நாயர்கள் உணர மறுத்தனர். அதன் காரணமாக கொச்சி வீதிகளில் சனாதன நாயர்கள் ஈழுவ இளைஞர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்கள். ஈழுவர்கள் பலம் பெற்றதை உணர்ந்த நாயர்கள் ஈழுவர்களை சனாதனமாக்கினர். நெய்யாற்றின் கரை ஊருட்டம்பலத்தில் நாயர்கள் ஈழுவர்களின் உதவியுடன் புலயர்களைத் தாக்கினர். அய்யங்காளி அவர்கள் குருவிடம் முறையிட்டார். குரு நேரடியாக உருட்டம்பலம் வந்தார். ஈழுவர்களைக் கண்டித்தார். சாதிய ஒடுக்குதல்களின் போது ஈழுவர்கள் பாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களின் தோள்தானென்று அறிவுறுத்தினார். நாயர்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த நாயர்கள் இறங்கி குருவின் சொல்லுக்கு அடிபணிந்தனர்.

கேரள வீதிகளில் ஸ்ரீ நாராயண குரு கட்டமைத்த பாதைகளில் புலயர் சமூகம் வீறு கொண்டு முன்னேறியது. ஆகவே ஸ்ரீ நாராயண குரு என்னும் புள்ளி காலத்துக்குத் தக்கவாறு முடிவுகளை உருவாக்கி பரந்த சிறகுகளால் கேரளத்து வானத்தை சுத்திகரித்தது. “ஈழுவர்கள் பலம் பெற்றால் கேரள சமூகம் பலம் பெறும்” என்று வெளிப்படையாக ஈழுவர்கள் எழுச்சியை அங்கீகரித்தார். ஏனென்றால் 700 ஆண்டுகளாக புறம் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தை 25 ஆண்டுகளில் தலை நிமிரச் செய்தாரென்றால் மனித மூளையின் பலம் எத்தனை வசீகரமானதென்றே வியப்படைய முடியும். இன்றைய கேரளத்தில் அனைத்து சாதிகளும் ஈழுவ சமூகத்தின் திருமண உறவையே சுவீகரித்துக்கொண்டனர். கேரள மண்ணில் வைதீகக் கலாச்சாரத்தால் நேரடியாகத் தாக்குண்டவர்கள் ஈழுவர்கள் - நிஷ்காமிய என்பது புரோகிதம் சத்ரியர்களுக்குத் தரும் பண்பாட்டுக் கடமை - யாகங்களை தொந்தரவு செய்யும் மக்களை அழித்தொழிப்பது - நிஷ்காமிய புரோகிதப்படி ஈழுவ சமூக குழந்தைகள் 15 பேரை மார்த்தாண்ட வர்மன் யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு பொசுக்கிக் கொன்றான். (குறிப்பு - ஸ்ரீ நாராயண குரு பிறந்த வருடத்தை ஒட்டி நிகழ்ந்த சம்பவம் இது. யூதன் ஒடுக்கப்படும்போது ஒரு மோசஸ் உதிப்பது போல ஈழுவ ஒடுக்குதலின் பிறப்பே ஸ்ரீ நாராயண குருவாகும்)

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் பலமடைவதற்கு சமூக சூழல் காரணியாக இருந்த போதும் தமிழகத்து வானில் தோன்றிய மின்னல் கீற்று ஒன்று “அய்யா வைகுண்டராய்” அவதரித்த போது தமிழகத்து வானில் வளர்பிறை ஒன்று மலர்ந்திருந்தது.

யூத அறிவே உலகின் சிறந்த அறிவு என்று வாதிடுபவர்கள் இந்தக் காவி உடை தரித்த நாடார் குல யூதரை மறந்துவிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1888 ஆகும். நாடார் குலத்தில் அய்யா வைகுண்டர் பிறந்து வாழ்ந்தது (1809 - 1851) ஆகும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரகடனப்படுத்தியதற்கு 30 வருடங்களுக்கு முன்பாக ‘தொல்புவியினிலடங்கா’ என்று சர்வதேச கீதம் பாடிய யூதனுக்கு நிகரான குலம் நாடார் குலம் என்பதன் அடையாளமே அய்யா வைகுண்டரின் வருகை ஆகும். ‘அன்புக்கொடி’ என்று தெரசா அன்னைக்கு முன்பு மனிதர்களை நேசித்த மகான். முறையினிலடங்கா - என்றார். இறைவனை ஒரு குறிப்பிட்ட வேத நூல்களில் மட்டும் தேடாதே என்றார். இறையினிலடங்கா என்றார். இறைவனைக் கூண்டுக்குள் அடைக்காதே உருவத்துக்குள் மறைக்காதே என்றார். மொழியினிலுமடங்கா- இறைவனுக்கு ஒரு தனி மொழி கிடையாது என்று மறுத்தார். யுகத்தினிலுமடங்கா என்றார். வேதகாலம், கலியுகம், மேலுலகம் என்றும் சொர்க்கம், நரகம் என்ற பிதற்றல்களை தூர எறிந்தார்.

அய்யா வைகுண்டர் பிறந்த பொழுது நாடார் சமூகத்தின் கைகளில் வாளொன்று பிறந்தது. சமரசமற்ற போரில் தடைகளைக் குதிரைகளின் பலம் கொண்டு தகர்த்தெறிந்து வெற்றியை தமிழகத்து போர்க்கலத்தில் பதிவு செய்தது. அய்யா வைகுண்டர் துவக்கி வைத்த ஓட்டப் பந்தயத்தை வென்ற பின்னே நாடார் சமூகம் ஓய்வெடுத்தது. கொடி கண்ட முதல் தமிழன் அய்யா வைகுண்டரே. ..