Friday, July 1, 2011

அவன் - இவன் (திரைப்பட விமர்சனம்)


சில திரைப்படங்களின் முடிவு (Result) தெரியாமல் அமர்ந்து விட்டு பணத்தை இழந்ததோடு படம் பார்க்கப் புறப்படுவதற்கு முன்னிருந்த சிறு நிம்மதியையும் தொலைத்து விட்டு புலம்புவோம். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்தினம், அகத்தியன், உதயகுமார், ராஜசேகர், விஜய், சீமான், அமீர் பேராண்மை இயக்குநர் ...என்று நீளும் தரமான திரைப்பட இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் பாலாவுக்கு என்று நிரந்தர இடம் உண்டு என்பதால் இயக்குநர் பாலா திரைப்படத்தினை துணிவுடன் சென்று பார்க்கலாம் என்பதால் படம் வெளிவந்த நாளில் மூன்றாவது ஆட்டம் திரைப்படம் பார்த்தேன்.

வாழ்க்கையில் வாழ்நாளில் பாவம் செய்பவர்கள் பாவத்தைக் கழிக்க காசிக்கோ, பாபநாசத்திற்கோ, ராமேசுவரத்திற்கோ செல்லத் தேவையில்லை. இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்களது பாவம் தொலைந்து விடும்.

அவன்-இவன் திரைப்படம் பற்றிய எனது கருத்து:

“கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வரும் உயிர்ப்புடன் திரையரங்கில் உலாவுகிறார்கள். அப்படியென்றால் கதை? நாகரீக சமூகம் பார்க்க மறுக்கும் கலாச்சாரத்தை தொலைத்த மனிதர்களின் வாழ்வு பற்றிய ஓர் ஆவணப் படம்... இந்திய அரசும் ரா உளவுப் பிரிவும் இலங்கைப் பிரச்சனையில் எவ்வளவு மடையர்களாக நடந்தார்கள் என்கிற உண்மையைப் போகிற போக்கில் ஒரு நொடியில் ஒரே வசனத்தில் பதிவு செய்துள்ளார். அரங்கு முழுக்கக் கைத்தட்டல். (இதர தமிழ் இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களில் ஈழத் தமிழர் பிரச்சனையை தொட வேண்டுமென்று (மணிரத்தினம் போலில்லாமல்) கோடு போட்டு காட்டியுள்ளார். எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை” போல சென்று கொண்டிருந்த நாவலில் ஏன் வில்லன் நுழைந்தான். விசாலின் மாறு கண்ணுக்கும் கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பெரியவரை சீன ஜிம்னாஸ்டிக் கலைஞர் போல கொடுமை செய்ய வேண்டுமா? என்று பல கேள்விகள் படம் முடிந்த பின் நம் மனதில் தோன்றினாலும் விஷால், அம்பிகா, ஆர்யா… மற்றும் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களை பயன்படுத்திய விதம்... நம் மனதில் இயக்குநர் பாலாவுக்கு 100-க்கு 90 மதிப்பெண் போடச் சொல்கிறது... ஆனால் கதை, திரைக்தை மற்றும் பட உருவாக்கத்துக்கு நாம் மதிப்பெண் தர வேண்டுமென்றால் நாற்பதுக்கு மேல் தர இயலாது... ஆடு, கோழிகளை சுவைக்கும் மனிதருக்கு ஏன் அடிமாட்டு பசுக்கள் மீது நேசம் வருகிறது? ஊடக இந்துத்துவா... முகம் திரைப்படத்தில் ஊடுருவுகிறது. எது எப்படி இருந்த போதும் கடும் உழைப்பு திரைப்பட உருவாக்கத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment