தனியார் பள்ளியில்
எட்டாம் வகுப்பு படிக்கும்
என்மகன் கேட்டான்
அப்பா
நாம் எஸ்.சி.யா?
இல்லை பி.சி.யா?
இல்லைஎம்.பி.சி.யா?
ஓ.சி.யா?
எனது வகுப்பில்
என் ஆசிரியர்
கேட்கிராரென்று...?
நான் சொன்னேன்
தமிழராய் நாம் அரசாண்ட போது
அரசசாதி!
சேர சோழ பாண்டிய அரசு
வீழ்ந்த போது
நாம் சூத்திர சாதி!
தந்தை பெரியாரும் அம்பேத்கரும்
எழுந்த போது
நாம் போராளி சாதி...
அவன் சொன்னான்
கமல் மாதிரி
புரியாமல் பேசுகிறீர்களே...
அப்பா என்னை ஆளைவிடு!
2 comments:
அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
அருமை.
Post a Comment