வருணாசிரம முறைதான் தி.க. வினர் மிகக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. அது அன்றுபோல் இன்றும் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். அது உண்மைக்குப் புறம்பானது. இன்று பிராமண சாதியினர் என்று ஒரு பிரிவினா; உள்ளனர். அதுதான் வருணாசிரம தர்மம் என்றால் இவர்கள் வருணாசிரம தர்மத்தையே புரிந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் சென்றவிடமெல்லாம் வருணாசிரம முறை தோன்றவில்லை. அங்கு இருந்த வெள்ளை நிறத்தவரோடு ஐக்கியமாகிவிட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்த போதுதான், இங்கு வந்து சேரும் முன் புரோகிதம் செய்யும் பிராமணர்களாகவும், போர் புரியும் சத்திரியர்களாகவும், பிரிந்திருந்த ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ச்சியடைந்திருந்து வேளாண்மையிலும் வர்த்தகத்திலும் ஈடுபட தங்களில் ஒரு பிரிவினரை வைசியர்களாக்கினர். இங்கு வாழ்ந்து வந்த பூர்வீகக்குடி கருப்பு நிற மக்கள் மீது ஆதிக்கம் பெற்ற அவர்களை தாசர்களாக - சூத்திரர்களாக உடலுழைப்புப் பணிகளுக்காகத் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இவ்வாறு தான் நால் வருணம் தோன்றியது. உண்மையில் இருவருணம்தான். வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தான் மூன்று வருணத்தினராயினர். ஒவ்வொரு கோத்திரத்திலும் இந்த வருணத்தினர் இருந்தனர். அன்றைய உற்பத்தி முறையின் வளர்ச்சி நிலையிலிருந்து இது தோன்றியது. இதில் பிராமணர்கள் வேதம் கற்ற புரோகிதர்கள் என்ற முறையில் மேலாதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் தான் முற்றாக உடலுழைப்பில் ஈடுபடாதோர். நான்கு ஆசிரம வாழ்க்கை என்பதும் இவர்களுக்குத்தான் பொருந்தக் கூடியதாக இருந்தது. வாழ்க்கையின் நான்கு கட்டங்கள் என்பதுதான் இதன் பொருள். பிரம்மச்சாரியம் (மாணவப்பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வானப் பிரஸ்தம்(காடுறைதல்) சன்யாசம் என்பதே நான்கு ஆசிரமங்கள் ஆகும்.
மாணவப் பருவம் 12 ஆண்டுகள் மரத்தடியில் குருவின் பக்கத்தில் அமர்ந்து வேதம் கற்க வேண்டும். அன்று பிராமணர்கள் அனைவருக்கும் இது கட்டாயமாக இருந்தது. இன்று எத்தனை பிராமணர்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். கான்வென்ட் பள்ளிக்கல்லவா பிள்ளைகளை அனுப்புகின்றனர். இல்லற வாழ்க்கைக்குப் பிறகு எத்தனை பிராமணர்கள் காட்டு வாழ்க்கைக்கு செல்கின்றனர். இங்கு கல்வி முடித்தவுடன் ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ தானே செல்கின்றனர்! அதே போல் கடைசி கட்டமான சன்யாச வாழ்க்கைக்கு எத்தனை பிராமணர்கள் செல்கின்றனர்? ஓய்வுக் கால வாழ்க்கையை நகரங்களில் வசதியான முறையில் தானே கழிக்கின்றனர். ஒரு “தர்மம்” என்ற முறையில் பிச்சையெடுத்துண்ண எந்த பிராமணன் செல்கிறார்? இதர சாதியினரைப் போல ஏழைப் பிராமணர்கள் எல்லா வயதினரும் பிச்சை எடுத்து வாழ்வதைப் பார்க்கின்றோம். பிராமணன் என்பதற்கு அடையாளமாக பூணூல் ஒன்றுதானே மிச்சம்! பிராமணரல்லாத சில சாதியினரும் பூணூல் அணிகின்றனர். பூணூல் இன்றைக்கு சமூக அந்தஸ்தைத் தீர்மானிப்பதாகவும் இல்லை. இதர சாதியினர் அதற்கு எந்த மதிப்பும் அளிப்பதாகவும் இல்லை. உண்மையில் அது ஒரு கேலிப்பொருளாகியுள்ளது. (மார்க்சிஸ்ட் ஏப்ரல்-94 பக்கம் 40)
நம் இந்திய பூமியில் சாதிகள் இருக்கக்கூடாது என்பது நேர்மையானது. ஆனால் இன்றைய இந்திய சமூகத்தில் சாதிகள் பலமாக உள்ளது என்பதை ஒத்துக் கொண்டால்தான் சாதிகளற்ற சமூகம் என்னும் புள்ளியை நோக்கி இந்திய சமூகத்தை நாம் நகற்ற முடியும். வர்க்கம் தான் இந்த மண்ணில் உள்ளது என்று வாதிடும் இடது சாரிகள், இன்று கட்சிக்குள் தலைதூக்கியிருக்கும் சாதிய, ராட்சச ஜந்துகளினால் அவதிப்படுகின்றனர். வங்க அமைச்சரோடு இது முடியும் பிரச்சனை கிடையாது. மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. வரதராஜன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகத்தில் பல இடங்களில் நமது கட்சிக்குள்ளே சாதியம் தலை தூக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வேதனையுடன் பரிசீலிக்கிறது என்று கண்டனம் செய்தார். கேரளத்தில் கெளரி அம்மாள் புறக்கணிக்கப்பட்ட போது ஈழுவர்கள் இடதுசாரிகளுக்குத் தந்த நெருக்கடி பின் தோழர் அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பழிதீர்த்துக் கொண்டது ஈழுவர் சமூகம். இந்திய சமூகத்தில் சாதி இல்லை என்று வாதிடும் நபர்கள், சாதி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். சாதி இந்திய சமூகத்தில் பலமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்பவர்களே சாதிகளற்ற சமூகம் நோக்கி பயணிப்பார்கள். இந்திய சாதிகள் பற்றிய சிறு புள்ளி விபரமே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
1980 –ல் மண்டல் குழு சமர்ப்பித்த சில தகவல்கள்
இனத்தின் பெயர் | மக்கள் தொகை | அரசு அதிகாரிகள் |
உயர்கல்வி கற்றவர்கள் |
உயர் பதிவியில் உளவர்கள் | விவசாயிகள் | பூமி |
பிராமணர்கள் |
3.5% |
41% |
50% |
61% |
10% |
5% |
சத்திரியர்கள் |
5.5% |
15% |
16% |
12% |
27% |
80% |
வைசியர்கள் |
6% |
10.5% |
12% |
13% |
60% |
9% |
சூத்திரர்கள் |
52% |
8% |
12% |
7% |
1.8% |
4% |
சிறுபான்மையினர் |
10.5% |
3% |
1.5% |
2% |
0.8% |
1% |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் |
15% |
15% |
6% |
4% |
0.3% |
0.5% |
பழங்குடியினர் |
7.5% |
7.5% |
2.5% |
1% |
0.1% |
0.5% |
மண்டல பரிந்துரைப்படி சத்திரியர்களாக அடையாளப்படுத்தப்படும் 5.5% மக்கள் இந்திய தேசமெங்குமிருந்த குருநில மன்னர்களின் பரம்பரையினர் (மன்னர் மானியம் பெற்றவர்கள்), மத்திய மாநில அரசுகளின் முதல்நிலைப் பணிகளில் உள்ளவர்கள் (இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் வகித்து வருபவர்கள்). மேற்படி குறியீட்டில் 90% ஆரியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள போதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆரியரல்லாத முன்னேறிய சாதியினர் 10% உள்ளனர் என்று புரிந்து கொள்ளலாம்.
6% வைசியர்கள் என்ற பிரிவினில் தேசிய, தரகு, பிராமண முதலாளிகளும், சேட் பிராமணர்கள் அவர்களின் கடைசி பிரிவினராகும் … பிராமணரல்லாத முதல் வைசியர் அநேகமாக மகாத்மா காந்தியாகவே இருப்பார்.
6% வைசியர்களில் பிராமணரல்லாதோர் 1% மட்டுமே இருக்கக்கூடும்.
பள்ளிக்கல்வியில் மாணவர்களின் நிலை (1881-82)
மாணவர்கள் |
நடுநிலைப் பள்ளி பயனாளி |
உயர்நிலைப்பள்ளி பயனாளி |
||
கிறித்தவர்கள் | 1.429 | 12.06 | 111 | 2.26 |
பார்ப்பனர்கள் | 3.639 | 30.7 | 1987 | 40.29 |
விவசாயிகள் | 624 | 5.26 | 140 | 2.85 |
தாழ்த்தப்பட்டவர்கள் | 17 | 0.14 | ||
பிற்படுத்தப்பட்டவர்கள் | 3823 | 32.25 | 1573 | 32.04 |
முகம்மதியர்கள் | 687 | 5.8 | 100 | 2.04 |
பார்சியர்கள் | 1526 | 12.87 | 965 | 19.66 |
மலைவாழ் மக்கள் | 6 | 0.05 | 0 | 0 |
ஜீக்கள் | 103 | 0.87 | 92 | 0.86 |
இந்திய சுதந்திரப் போரினை சத்திரிய பிராமணர்களையும், பிராமணர்களையும் ஒரு நூலில் கோர்த்து வைசிய பிராமணர்கள் நடத்தி வென்ற பின்பு, இந்திய தேசமெங்கும் பிராமணரல்லாத மக்கள் அரசியலில் குதிக்க ஆரியர்கள் தங்கள் பிடிமானத்தை இழக்கத் துவங்கினர். தென்னகத்தின் காமராசர் டெல்லியில் கால் பதிக்க, பிராமணரல்லாதோரின் வேகம் கூடியது. வைசிய பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்த 14 பெரிய இந்திய ஷெட்யூல் பாங்குகள் (1. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2. பாங்க் ஆப் இந்தியா, 3. பஞ்சாப் நேஷனல் பாங்கு, 4. பாங்கு ஆப் பரோடா, 5. யுனெடெட் கமர்சியல் பாங்கு, 6. கனரா பாங்கு, 7.யுனெடெட் பாங்கு, 8. தேனா பாங்கு, 9. சிண்டிகேட் பாங்கு, 10. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 11. அலகாபாத் பாங்கு, 12. இந்தியன் பாங்கு, 13. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 14. இந்தியன் ஓவர்சீஸ் பாங்கு) அரசுடமையாக்கப்பட்டது. 19-07-1969 ல் ரூ.50 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகள் உள்ள இந்திய ஷெட்யூல்ட் பாங்குகள் மட்டும் விதி விலக்கிலிருந்து தப்பித்தது.
வங்கிகள் தேசவுடமையாக்கப்பட்டதனால் வைசிய பிராமணர்களின் அசுர வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. பின் 2-12-1971 அன்று மத்திய அரசு கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பில் நேரடி பாதிப்பை அடைந்தவர்கள் சத்திரிய பிராமணர்களே. உச்சநீதி மன்றத் தடையினை அடுத்து முறையான திருத்த மசோதா நிறைவேறியது.
சத்திரிய பிராமணனின் தலையில் கை வைத்தபோது கொதிக்கிறது வைசிய பிராமணனின் ரத்தம்.
“தேசம் விடுதலையடைந்த போது சமஸ்தானங்கள் ஆதிபத்திய அதிகாரங்களை மட்டுமின்றி தமது அரசு பொறுப்புகளையும் விட்டுக் கொடுத்து தேசத்தின் ஐக்கியம் துரிதமாகக் கை கூடுவதற்கு துணை புரிந்தனர். இது பெரிய தியாகம் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு இணங்கியதற்காக அவர்கள் நிம்மதியுடன் வாழ ராஜ மானியத்தையும், சில விசேச உரிமைகளையும் அப்போது துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அளித்தார். அவர்கள் யூனியன் சர்க்காருக்கு தமது அதிகாரத்தை மாற்றிய உடன்படிக்கைகளில் ராஜ மானியங்களும், தனி உரிமைகளும் இடம் பெற்றன. அதனை அரசியல் சாசனத்திலேயே இவற்றை சேர்த்து உறுதி செய்திருக்கிறார்கள். சர்தார் அளித்த இந்த இரட்டைப் பாதுகாப்பைத் துச்சமாக மதித்துக் கிழித்தெறிந்து விட்டார் திருமதி. இந்திராகாந்தி. செய் நன்றியை கொன்ற குற்றம் மட்டுமின்றி வாக்கு மீறிய குற்றமும் இதில் சேர்ந்திருக்கிறது. ஆகையால்தான் இது நமது தர்மத்துக்கும் பண்பாட்டுக்கும் புறம்பான அடாவடிச் செயலாகிறது.”
(4-12-1971 - தேதியிட்டு தினமனி தலையங்கம்)
தினமனி பத்திரிகை செய்தி நமக்கு புரிய வைப்பது கோவில் நுழைவு என்பது தலித்துக்களுக்கு மாத்திரம் பொருந்தாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
மதுரையிலுள்ள மோதிலால் நிலையம், வைசிய வாலிபர் சங்கம், நெல்மண்டி வாலிபர் சங்கம், லஜபதி நிலையம், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம், சுதந்திர தின ஞாபகார்த்த வாசக சாலை, யாதவ வாலிபர் சங்கம், வர்த்தகத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் சேவாஸ்ரமம், ஸ்ரீ மதிகள் சங்கம், அரிஜன சேவா சங்கம், செங்குந்த இளைஞர் சங்கம், நேரு வாசக சாலை, நித்தியானந்த நிலையம், பாரதி நிலையம், சித்த வைத்திய ஆராய்ச்சி சங்கம், சரஸ்வதி வாசக சாலை, ஜவாகர் வாசக சாலை, அரிஜன முன்னேற்ற வாலிபர் சங்கம், ஜான்சி ராணி வாசக சாலை, கமலா நேரு வாசகசாலை, விவேகானந்தா இளைஞர் சங்கம், தாகூர் வாசக சாலை, சிவ-ராவ் வாசகசாலை, பாரதி சேவா சமாஜம், பாரத மாதா வாசக சாலை, அன்சா, வாசக சாலை, அகம்படியர் வாலிபர் சங்கம், வேளாளர் அபிவிருத்தி சங்கம், பாபு கானு வாசக சாலை, நாயுடு வாலிபர் சங்கம்,இ இந்திய சுதந்திர வாலிபர் சங்கம், நாடார் ஊழியர் பிரசார சபை, தென்னிந்திய விஸ்வகர்மா சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், விஸ்வகர்மா கைத்தொழிலாளார்கள் சங்கம், சிதம்பரம்பிள்ளை வாசக சாலை, சலவைத் தொழிலாளர் சங்கம், விஸ்வகர்மா வாலிபர் சங்கம், விஸ்வகர்மா இளைஞர் சங்கம், மருத்துவர் சங்கம் - ஆகிய ஸ்தாபனங்கள் மற்றும் பல ஸ்தாபனங்கள் ஆதரவில் நேற்று மாலை ரிட்டையர்டு சப் ஜட்ஜ் ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணிய பந்துலு தலைமையில் திலகர் சதுக்க மைதானத்தில் நடைபெற்ற பெருத்ததோர் பொதுக்கூட்டத்தில்,
1. “மதுரை மாநகரிலுள்ள மேற்கண்ட சங்கங்களின் ஆதரவில் கூடியுள்ள மதுரை வாசிகளும் மற்றவர்களும் அடங்கிய இக்கூட்டம் சென்னை சட்ட சபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆலயப் பிரவேச சட்டம் வெற்றிகரமாகவும் அமைதியோடும் நடைபெற்று வருகிறதென்றும், அச்சட்டத்தை மாற்றவோ நிறுத்தி வைக்கவோ எவ்வித நியாயமோ, காரணமோ இல்லை என்ற சர்க்கார் உத்தரவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறதென்றும், அவ்வுத்திரவை ஸ்திரமாக நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தை சர்க்காருக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறது.
2. “இத்தடன் ஆலயப் பிரவேசச் சட்டத்தை அனுசரித்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலுள்ள கோயில்களையும், சகல இந்துக்களுக்கும் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக் கொள்கிறது.” எனும் தீர்மானங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடையே நிறைவேறின.
(நன்றி 4-3-1940 - தினமனி)
(ஆலயப் பிரவேசச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டமென்று பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவை அடிப்படையில் உண்மையற்றது. பிராமணரல்லாதோர் எழுச்சியின் பலனாக கிடைக்கப் பெற்றது. வரலாற்றினை தவறாக படிப்பவர்களைத் திருத்துவோம். பிராமண சிந்தனையினை அப்புறப்படுத்துவோம். இடையில் பிற்படுத்தப்பட்ட பிராமணர்கள் மற்றும் முன்னேறிய பிராமணரல்லாதோர் சாதிகளில் ஆரியர்கள் தோன்றாவண்ணம் சதுர்வர்ண நான்கு அடுக்கினையும் அப்புறப்படுத்துவோம்.)
தமிழகத்தில் நீதிக்கட்சி தோற்றுப் போன போனது அதில் தலைமையேற்ற சைவ வெள்ளாளர்கள் மற்றும் தங்களை உயர்சாதியினர் என்று கூறிக்கொள்ளும் பணக்கார சூத்திர சாதிகளின் மனநிலையில் இல்லாத நேமையினால் ஏற்பட்டது (சைவ வெள்ளாளர்கள் இன்று வரை தாங்கள் சூத்திரர் அல்ல என்றே வாதிடுகிறார்கள்).
முத்து மோகனின் வேதாக்கத்தின் கலாச்சார அரசியல் பக்கம் 31-ல் பதிவு பெற்ற விபரங்களே அத்தாட்சியாகும்.
வட்டார மேட்டுக்குடி பக்தி இரண்டும் கெட்டான் தன்மை கொண்டது. இது வைதீகத்தோடு இரட்டை உறவு கொண்டது. வைதீக மேலாதிக்கத்தை இது ஒரு புறம் எதிர்க்கும். இன்னொரு புறம் வைதீகம் முன்மொழியும் வர்ண வரிசையை வட்டார மக்களிடம் பரப்பும். வைதீகத்தை எதிர்க்கும் போது இது அடித்தள மக்களை ஆரத்தழுவும். உள்ளுக்குள்ளேயே தனது மேலாண்மையை நிறுவிக்கொள்ள அவர்களை தன்னிலிருந்து பிரித்துக் காட்டும். தமிழ் சூழல்களில் வட்டார மேட்டுக்குடிகள் தமிழ் மொழியோடும், தமிழ் நிலத்தோடும்,
தமிழ் பண்பாட்டு உணர்வோடும் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்னொரு புறம் ஆகமங்களோடு வேதங்களும் தமது புனித நூல்களே என்று அறிந்து கொண்டனர். வட இந்திய வைணவ சைவ புராணங்களை தமிழுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் இவர்கள் தயங்கியதில்லை.
இந்திய தேசமெங்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று வரையில் பின் தங்கியமக்களாக வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திறகுப் பின் சிறிதளவு முன்னேற்றப் பாதையில் பயணித்த போதும், பிராமணர்களுடன் ஒப்பிடும் போது நிலவுடமை கொண்ட முன்னேறிய சாதிகளுடன் ஒப்பிடும் போதும் பொருளாதார, கல்வி பலத்தில் பின்தங்கி வாடுகின்றனர். மத்திய அரசின் 27% இட ஒதுக்கீடு விசயத்தில் தற்சமயம் வெற்றி இலக்குடன் நெருங்கி வருகின்ற சமயத்தில் தாழ்த்தப்பட்ட, மலைசாதி மக்களுடன் சிநேகமான தோழமை உணர்வினை வளர்ப்பதோடு, பரஸ்பர புரிதலும், இருதரப்பினர்களுடன் வளர்வது ஒன்றே இன்றைய உடனடித் தேவையாகும்.
பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முற்போக்கு இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காய் களமிறங்குவதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களைவிட தாழ்ந்த சாதியினர் கிடையாது என்ற உண்மையினை தமிழகத்து வீதிகளில் உரக்க முழங்க வேண்டிய நேரம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
இன்றைய இந்திய சூழலில் பார்ப்பனியம் பிராமணர்கள் வடிவில் இருப்பதற்கு நிகராக சூத்தர சாதிகளுக்குள்ளும், ஆதிசூத்திர சாதிகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. ஆகவே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோபிசிக்கல் சங்கம், இராம கிருஷ்ண மிசன், வைதீக சங்கராச்சாரியர் மடம் போன்ற அரசியல் பீடங்களை பிராமணரல்லாதோர் குறிவைக்கும்போது அவர்கள் தன்னைத்தானே ஒவ்வொருவரும் சுத்திகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிராமண, சத்திரியன், வைசியன் ஆகிய மூவருமே ஆரியர்கள் என்ற நிதர்சன உண்மை கூட ஆரியரல்லாத மக்களிடம் (குறிப்பாக படித்த. பண்பாளர்களிடம்) செல்லவில்லை. மார்க்சிய மற்றும் திராவிட தேசிய இயக்கங்களில் படிப்பாளிகளிடம் கூட முழுமையாக போய் சென்றடையவில்லை. தமிழகத்திலுள்ள பிராமணரல்லாதவர்களிடம், வர்ண விளக்க கல்வியை கொண்டு செல்ல திராவிட மார்க்சிய இயக்கங்களே தயக்கம் காட்டுகின்றனர். பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் மட்டுமே இத்தகைய கருத்துப் பிரச்சாரத்தை தீவிரமாகப் பரப்பி பல இடங்களில் கொடிய தாக்குதலைத் தமிழ் சமூகத்தைச் சுத்திகரிப்பதற்காகத் தாங்கி நின்றார். சர்- சூத்திரன் என்று புளகாகிதம் அடைந்த பிராமணனுக்கு கடும் சொல்லில் பாடம் நடத்தினார். தந்தைப் பெரியார் தன்னை சாதி நீக்கம் செய்து கொண்டதைப் போல, தமிழகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சாதி நீக்கம் செய்ய விரும்பவில்லை அதற்கு பிரதானம், சதுர்வண நூலடுக்கினில் சூத்திரனுக்கு மேலாக படியேறிச் செல்ல இயலுமா? என்ற ஏக்கம் ஏனென்றால் பலமான மூன்று அடுக்கினை (பிராமண, சத்திரிய, வைசிய) கொண்டிருந்த பிராமணர்கள் இன்று வலுவிழந்து விட்டனர். ஆரியர்கள் தமிழ் சமூகத்தில் அப்புறப்படுத்தப்பட்டதனாலே அவர்களின் மூன்றடுக்கினை கைப்பற்றத் துடிப்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகத்தை சீரழித்த ஆரியர்களை விட கேடு கெட்டவர்களாக வரலாறு அவர்கள் முகத்தில் உமிழும்.
இந்து மதம் என்பது இந்திய தத்துவங்களை உள்வாங்கிய மதம் என்பதை புரிய நடராஜகுரு, யதி உரையாடல்கள் நமக்கு உணர்த்தும்.
ஒரு முறை குரு நித்ய சைதன்யயதியும், நடராஜ குருவும் காரில் சென்று கொண்டிருந்த போது யதி அவர்கள் பகவத் கீதை புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டு வந்தார். திடீரென்று நடராஜ குரு யதியின் கையிலிருந்த பகவத் கீதையினை பிடுங்கி எறிந்தார். புத்தகம் தெருவில் புழுதியில் விழுந்தது. மிகுந்த கோபமடைந்த யதி காரிலிருந்து இறங்கி வந்து புத்தகத்தை எடுத்தவர் ‘எதற்காக இப்படி மூர்க்கத்தனமாய் நடந்துகொள்கிறீர் என்று நடராஜ குருவினை கண்டித்தார். நடராஜ குருவோ எவ்வித பதட்டமுமின்றி பகவத் கீதையின் முகப்பில் ‘இந்துக்களின் நூல் என்ற வாசகத்தை காண்பித்தார். பகவத் கீதை இந்து மதத்தின் நூலா? அல்லது இந்தியத் தத்துவ நூலா? என்று கேட்க யதியின் கண்கள் அன்று திறந்தன. ரிக், யசூர், சாமம், அதர்வன அடங்கு முறை (வேதங்கள்) நூல்களுக்குப் பிறகு பிராமணங்கள், ஆரண்யங்கள் என்ற இருவகை இலக்கியங்கள் இயற்றப்பட்ட பின் இந்தியத் தத்துவ நூல்களாக அவைகள் உருப்பெறவில்லை. உபநிடத காலமே (அறிவு தத்துவம்) இந்திய தத்துவ மரபின் வீச்சான பருவம். ஆரியரல்லாத மக்களின் அறிவினை ஆரியர்கள் சிறப்பாக பயன்படுத்தினர். இயற்கை பற்றிய தேடலைக் கொண்ட சாங்கிய தத்துவத்தை வேதங்கள் உள்வாங்கியது. யோகாசனம், தியானம், மனப்பயிற்சிகளை உள்வாங்கியது. வேதங்களை சாடிய சார்வாகத்தை வேரறுத்தது. ஆசிவக மரபில் உதித்த சமணத்தை கழுவிலேற்றி சமணக் கூறுகளை சிறிதளவு உள் வாங்கிக் கொண்டது. பின் பிரம்மம் பற்றிய தேடல் கொண்ட உபநிடதங்கள் காலத்திற்கு ஏற்றார் போன்று மறுதலிக்கப்பட்டது. பல அது பல விளக்கங்களை சங்கரரின் அத்வைதமாகவும், ரமானுஜரின் விசிட்டாத்வைதமாகவும், மத்துவரின் துவைதமாகவம் விரிந்து, அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் வரையில் வளர்ச்சியைக் கண்டது. ஆகவே பகவத் கீதை ஒரு புறம் மாற்றங்களுக்கு உட்பட்டும், மற்றொருபுறம் “ஞானம் என்னும் நூலிலுள்ள மாலையிலுள்ள மணிகள்தான் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் என்று கிருஷ்ணனின் மாறாத வரிகளுக்குப் புறம்பாக குல தர்மங்கள் அழிவினைப் பற்றி ஆத்திரப்படுகிறது.
குல சஷயே ப்ரண ஸ்ரீ யந்தி குல
தர்மா ஸ நா த நா தர்மே நஷ்டே
குலம் கரு தஸ நமதா மோ பிப வத் யுத
நடராஜ குருவின் பார்வையில் பகவத்கீதை இந்திய தத்துவ நூல் பின் அது சவணர்களால் இந்து நூலாக்கப்பட்டது என்ற விபரம் யதியின் நெஞ்சில் ஆணியடித்தாற் போன்று பதிந்தது.
ஆகவே இந்துவாக வாழ்பவர்களுக்கு நான் குறிப்பிடுவது - இந்து மதத்தின் நான்கு அடுக்குகளை அப்புறப்படுத்துவோம். (ஐந்தாவது அடுக்கான ஆதிசூத்திரன் பொய்யானது - அவர்களின் இருப்பிடம் ஆரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது அடுக்கேயாகும்).
ஆனால் இன்றைக்கு இந்திய தேசமெங்கும் பரந்து கிடக்கும், சாதி என்னும் அடுக்கு - திருமண உறவு, வழிபாடு, கூட்டுறவு போன்ற குடும்ப உறவோடு தொடர்புடையது. ஆகவே சாதி நீக்கம் செய்பவர்களை வரவேற்போம். சாதியடுக்கினில் வாழ விரும்புகிறவர்கள் வாழ்ந்து கொள்ளலாம். பிற சாதிகளைத் துன்புறுத்தாமல் - பிற சாதிகளைத் தனது சூத்திர சாதியை விட கீழானவையென்று கருதுவதற்கு அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) எவ்வித ஆதாரமும், தார்மீக நியாயமும், விஞ்ஞானப்பூர்வ அறிவும் கிடையாது என்று நாளைய நமது குழந்தைகள் வளர்ந்த பின்பு நம் முகத்தில் காறி உமிழ்வார்கள்.
தமிழகத்து வீதிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழ் சிறுவர்களுக்கு தான் என்ன சாதி என்று தெரியாமல் விளையாடுகிறார்கள். அவர்களை சாதி மறந்து விளையாட விடுங்கள். அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு சாதி என்னும் சாக்கடையினை உணவாகத் தராதீர்.
அவர்கள் வளர்ந்த பின்னாவது இந்திய சாதிகளுக்கு ஒரு நீண்ட கல்லறையினைக் கட்டட்டும்... ஆரியர் மற்றும் அனைத்து பிராமணரல்லாத சாதிகள் நிம்மதியாக அந்தக் கல்லறையில் உறங்கட்டும்.
5 comments:
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
பல கருத்துக்களை ஒரே கட்டுரையில் நன்றாக தந்துள்ளீர்.தொடர்ந்து எழுதவும்.
மஹாபாரதத்தில் பிறப்பால் ஒருவன் பிராமனனாகவோ, சத்ரியனாகவோ, வைசியனாகவோ ஆகிவிட முடியாது என்று வருகிரது, ஆக பிராமன குலம், சத்திரிய, வைசிய குலம் என்று ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்?
பிறப்பால் ஒருவன் பிராமனன் ஆகிவிட முடியாது என்றால், பிராமனன் மகன் என்பதால் அவன் பிராமனன் ஆகிவிட முடியாது, சத்திரியனின் மகன் என்பதால் அவன் சத்திரியனாகிவிட முடியாது என்று தான் விளக்கம் கொள்ளவேண்டும், இதற்க்கும் மஹாபாரதத்தில் பல உதாரணங்களை முன்வைக்க முடியும், பாண்டுவின் அண்னன் திருதிராக்ஷ்ட்டிரன் சத்திரியன் இல்லை, மூத்தவராக இருந்தும் மன்னர் பதவி மறுக்கபட்டது, இதற்கு பலரது மேலாட்டமான விளக்கம் அவர் ஊனமானவர், பார்வையற்றவர் என்பதாகும், தார்பரிய விளக்க படி அவர் மனதளவில் ஊனமானவர், சத்ரியர்களின் குணங்களில் ஒன்றான அனைவறையும் சமாக பார்க்கும் பார்வையற்றவர், சத்திரிய தகுதி மற்றும் திறமையால் அவர் மன்னர் பதவிக்கு வரவில்லை, நிற்பந்தத்தால் பதவிக்கு வந்தவர், ஆசையால் பதவியில் ஒட்டி கொண்டவர், அவரே சத்திரியன் குணம் அல்லாத ஒருவன் மன்னர் பதவி (தகுதி்க்கு பொருத்தம் இல்லாத பொறுப்பை ஏற்றல்) அடைந்தால் என்ன கதி அடைவான் என்பதறக்கு திருதிராக்ஷ்ட்டிரனே முக்கியமான உதாரணம், பந்த்ததில் கட்டுண்டவன் சத்திரியன் இல்லை, திருதிராக்ஷ்ட்டிரன் பந்த்ததில் கட்டுண்டவன் , மன அமைதியோடு அனைத்தையும் இழந்தான். அவர் மகன் துர்யோதனன் சத்ரியன், ஒரு சத்ரியனால் மற்றொரு சத்ரியனை கடடுபடுத்தவோ, வசபடுத்தவோ முடியும் இதிலும் தோற்றவர் திருதிராக்ஷ்ட்டிரன்.
http://www.dharmam.in/
Post a Comment