Friday, December 16, 2011
மலையாளக் கட்சிகளும், மதராசபட்டினக் கட்சிகளும்
மலையாளி வாய்க்கு ருசியாக
அரிசி படைக்கும் தமிழனுக்கு
முல்லைப் பெரியாறை மூடி
வாய்க்கரிசி போடுவதில்
அச்சுதானந்தனாயிருந்தாலும்
உம்மன் சாண்டியாக இருந்தாலும்
நாளை அக்கா ஷகீலா வந்தாலும்
மலையாள அரபிக்கடல் கட்சிகள்
ஒன்றுபட்டுக் கரம் கோர்த்து
வீதிக்கு வந்து ஒன்றுபட்ட பின்பும்
கூறு போட்டு பிரிந்து கிடக்கும்
எம் மதராசபட்டின கட்சிகளோ
கைகளில் குஷ்டம் பிடித்த பீடிகையில்
கரங்கள் இணையாது
தனித்தனியாய்க் கூவிக் கூவி
கூவமாய் நாறுவதால்
இனி தமிழ் மெல்ல சாகுமா
இல்லை தமிழரின் நீராகார உரிமை சாகுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
Labels:
அரசியல்,
கவிதை,
முல்லைப்பெரியாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment